குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும்

குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தஅறிவிப்பு இந்திய ரயில்வேதுறையை பெரும்மகிழ்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

குஜராத்தில் தேர்தல் நடந்துகொண்டு இருந்ததால் அம்மாநிலத்திற்கு நலத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப் படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு நலத் திட்ட அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் அமைய இருக்கும் முதல் தேசியரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகம் இதுதான். இது ரயில்வே துறையில் இந்தியாவை முன்னேற்றுவதற்கும், இன்னும் நிறைய பணியாளர்களை இதில் சேர்க்கவும் வகைசெய்யும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது :''வதோதராவில் தொடங்கப்படும் இந்த பல்கலைக்கழகம் மோடியின் கனவை நினைவாக்கும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களுக்கு வலுசேர்க்கும் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமரின் நேரடிவிருப்பத்தின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இதற்காக வதோதராவில் ஏற்கனவே இருக்கும் ரயில்வேதுறைக்கு சொந்தமான நிலம் பயன் படுத்தப்பட இருக்கிறது. இந்த பல்கலைக் கழகம் முழுக்கமுழுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட இருக்கிறது. மேலும் இதற்கானதொகை அனைத்தும் இந்திய ரயில்வே துறையிடம் இருந்து பெறப்படும். இதில் 3000 மாணவர்கள் வரை சேர்க்கப் படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. ரயில்வேதொடர்பான சாட்டிலைட் தொழில்நுட்ப படிப்புகளும் இதில் சொல்லித்தரப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...