குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும்

குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தஅறிவிப்பு இந்திய ரயில்வேதுறையை பெரும்மகிழ்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

குஜராத்தில் தேர்தல் நடந்துகொண்டு இருந்ததால் அம்மாநிலத்திற்கு நலத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப் படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு நலத் திட்ட அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் அமைய இருக்கும் முதல் தேசியரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகம் இதுதான். இது ரயில்வே துறையில் இந்தியாவை முன்னேற்றுவதற்கும், இன்னும் நிறைய பணியாளர்களை இதில் சேர்க்கவும் வகைசெய்யும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது :''வதோதராவில் தொடங்கப்படும் இந்த பல்கலைக்கழகம் மோடியின் கனவை நினைவாக்கும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களுக்கு வலுசேர்க்கும் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமரின் நேரடிவிருப்பத்தின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இதற்காக வதோதராவில் ஏற்கனவே இருக்கும் ரயில்வேதுறைக்கு சொந்தமான நிலம் பயன் படுத்தப்பட இருக்கிறது. இந்த பல்கலைக் கழகம் முழுக்கமுழுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட இருக்கிறது. மேலும் இதற்கானதொகை அனைத்தும் இந்திய ரயில்வே துறையிடம் இருந்து பெறப்படும். இதில் 3000 மாணவர்கள் வரை சேர்க்கப் படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. ரயில்வேதொடர்பான சாட்டிலைட் தொழில்நுட்ப படிப்புகளும் இதில் சொல்லித்தரப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...