பூஜ்ஜிய நேரத்தில் வரலாற்று சாதனை படைக்கப் பட்டுள்ளது

மாநிலங்களவை பூஜ்ஜிய நேரத்தில் வரலாற்றுசாதனை படைக்கப் பட்டுள்ளது என்று அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்விநேரம், பூஜ்ஜியநேரம் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கேள்வி நேரத்தில் கேள்விகளை எழுப்ப 10 நாட்களுக்கு முன்பாக அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளிக்கவேண்டும். அதேநேரம் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து முன் கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் பூஜ்ஜியநேரத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பமுடியும். எனினும் அன்றைய தினம் காலை 9 மணிக்கு முன்பாக நோட்டீஸ் அளிக்கவேண்டும்.

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கேள்விநேரம், பூஜ்ஜியநேர அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது 10 உறுப்பினர்களின் நோட்டீஸ்கள் ஏற்கப்பட்டன. அதன்படி கவுரிலங்கேஷ் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப் பட்டது, விமான விபத்துகள், உத்தரபிரதேசம், குஜராத் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழந்தது உட்பட பல்வேறு முக்கியபிரச்சினைகள் குறித்து 10 உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தனர். கூடுதலாக ஓர் உறுப்பினரின் கேள்வியும் அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து அவைத் தலைவர் வெங்கய்யநாயுடு கூறியபோது, “மாநிலங்களவை வரலாற்றில் இது ஒருவரலாற்று சாதனை. பூஜ்ஜியநேரம் சுமுகமாக நடைபெற உதவிய எம்.பி.க்களுக்கு நன்றி” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...