பூஜ்ஜிய நேரத்தில் வரலாற்று சாதனை படைக்கப் பட்டுள்ளது

மாநிலங்களவை பூஜ்ஜிய நேரத்தில் வரலாற்றுசாதனை படைக்கப் பட்டுள்ளது என்று அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்விநேரம், பூஜ்ஜியநேரம் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கேள்வி நேரத்தில் கேள்விகளை எழுப்ப 10 நாட்களுக்கு முன்பாக அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளிக்கவேண்டும். அதேநேரம் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து முன் கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் பூஜ்ஜியநேரத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பமுடியும். எனினும் அன்றைய தினம் காலை 9 மணிக்கு முன்பாக நோட்டீஸ் அளிக்கவேண்டும்.

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கேள்விநேரம், பூஜ்ஜியநேர அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது 10 உறுப்பினர்களின் நோட்டீஸ்கள் ஏற்கப்பட்டன. அதன்படி கவுரிலங்கேஷ் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப் பட்டது, விமான விபத்துகள், உத்தரபிரதேசம், குஜராத் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழந்தது உட்பட பல்வேறு முக்கியபிரச்சினைகள் குறித்து 10 உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தனர். கூடுதலாக ஓர் உறுப்பினரின் கேள்வியும் அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து அவைத் தலைவர் வெங்கய்யநாயுடு கூறியபோது, “மாநிலங்களவை வரலாற்றில் இது ஒருவரலாற்று சாதனை. பூஜ்ஜியநேரம் சுமுகமாக நடைபெற உதவிய எம்.பி.க்களுக்கு நன்றி” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...