நாடாளுமன்ற புதியகட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசியசின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை திறந்துவைத்தார். மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான புதியநாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டுக்கூட்டத்திற்கு 1,272 இடங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.971 கோடி மதிப்பில் 62000 சதுர மீட்டரில் முக்கோணவடிவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனைதாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் இந்த கட்டிடம் அமைகிறது.
குளிர்கால கூட்டத் தொடருக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதியநாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்திலான தேசியசின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். தேசிய சின்னத்தை தாங்கி பிடிப்பதற்காக 6500 கிலோ எடையில் ஸ்டீலிலான அமைப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஷ்ரம் ஜீவிகளுடன் கலந்துரை யாடினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதியநாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் உயரமும் 9.5 டன் எடையும் உடைய வெண்கலத்தில் உருவான பிரமாண்ட தேசிய சின்னத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |