கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

மஹாராஷ்டிராவில், போலீசார் – நக்சல்கள் இடையே நடந்த சண்டையில், கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.


. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திரபட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தட்காவ்ன் வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து, நக்சல் வேட்டையில் சிறப்புபயிற்சி பெற்ற கமாண்டோ படையினர், தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, பாம்ராகாட் என்ற இடத்தில் பதுங்கியிருந்த நக்சலைட்களை, போலீசார் சுற்றிவளைத்தனர். இதையடுத்து, போலீசாரை நோக்கி, நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், 14 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

  தொடர்ந்து நேற்று கபேவஞ்சா வனப்பகுதியில் நடந்த மற்றொரு மோதலில் 6 நக்சலைட்கள் சுட்டுகொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.இந்நிலையில் போலீசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக அம்மாநில உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், என்கவுன்டர் நடந்தவனப்பகுதியில் கடந்த 22ம் தேதி 16 நக்சல் உடல்களை போலீசார் கைப்பற்றினர். கனமழை மற்றும் ஆள்பற்றாக்குறை காரணமாக தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேடுதல்பணி நடந்தது. அதில் மேலும் 15 உடல்கள் கைப்பற்றப்பட்டன. இன்னும் தேடுதல்பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...