கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

மஹாராஷ்டிராவில், போலீசார் – நக்சல்கள் இடையே நடந்த சண்டையில், கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.


. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திரபட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தட்காவ்ன் வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து, நக்சல் வேட்டையில் சிறப்புபயிற்சி பெற்ற கமாண்டோ படையினர், தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, பாம்ராகாட் என்ற இடத்தில் பதுங்கியிருந்த நக்சலைட்களை, போலீசார் சுற்றிவளைத்தனர். இதையடுத்து, போலீசாரை நோக்கி, நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், 14 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

  தொடர்ந்து நேற்று கபேவஞ்சா வனப்பகுதியில் நடந்த மற்றொரு மோதலில் 6 நக்சலைட்கள் சுட்டுகொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.இந்நிலையில் போலீசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக அம்மாநில உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், என்கவுன்டர் நடந்தவனப்பகுதியில் கடந்த 22ம் தேதி 16 நக்சல் உடல்களை போலீசார் கைப்பற்றினர். கனமழை மற்றும் ஆள்பற்றாக்குறை காரணமாக தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேடுதல்பணி நடந்தது. அதில் மேலும் 15 உடல்கள் கைப்பற்றப்பட்டன. இன்னும் தேடுதல்பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...