லட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்

கடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா … என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கிய அரசு நரேந்திர மோடியின் அரசு, நமது நாட்டில் முதன் முறையாக கடனை வாங்காமல். நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு எதுவெனக் கேட்டால் டக்கென அனைவரும் பதில் சொல்ல முடியும் அது மோடி அரசு என்று.

 

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க,  நடவடிக்கைகள் எடுக்க,  ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு (Special Investigation Team ) உச்சநீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது. அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இன்று நேர்மையாளர்களை போலபேசும் மன்மோகன் சிங்கும்,  சிதம்பரமும் 2014 வரை கிடப்பில் போட்டார்கள்.

 

ஆனால்,  மோடி அவர்கள் பிரதமரான பிறகு போட்ட முதல் கையெழுத்து இதுதான். ஆமாம் , மோடி அரசுதான் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்தது. இதற்கு பிறகு படிப்படியாக  கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை சேகரித்து வந்தது. பிறகு 2016ல், தாமாக முன்வந்து வரி பாக்கியை செலுத்துங்கள், வெறும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுகிறோம், நாங்களாக பிடித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரித்ததன் விளைவாக  தாமாக முன்வந்து வரி காட்டினர் பலர். அதன் அடிப்படையில் இந்திய அரசுக்கு ரூ. 73,920 கோடிகள் வரி கிடைத்தது.

 

ஆனாலும், வாய்ப்பு கொடுத்தும் பலர் திருந்தவில்லை. ஆகையால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக டிமானிட்டேசன் பாய்ந்தது. நமது நாட்டின் பெரும் பகுதி 80% சதவீதப் பணம் சுமார் 6.5 கோடி பேர்களிடம் அதாவது 5% சதவீதப் பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது. ஏதோ 16,000 கோடிகள்  மட்டுமே கருப்பு பணம் அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் விஷயம் ஒரு பெரும் பொய். பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டாலே அது வெள்ளை பணமாக மாறிவிட்டது என்கிற தகவல் மிகவும் தவறானது. ஏனென்றால் , அந்த பணத்திற்கு அதின் சொந்தக்காரர் கணக்கு காண்பிக்க வேண்டும்.

 

டிமானிட்டேசன்  க்கு பிறகு செய்யப்பட வருமான வரி சோதனைகளினால் கிட்டத்தட்ட ரூ.25,000 ஆயிரம் கோடிகள்  கண்டுபிடிக்க பட்டுள்ளன. மொத்தம் பிரதமர்  மோடியின் முதல் மூன்றாண்டுகளில், ரூ. 1 லட்சத்து37 ஆயிரம் கோடிகள்  வருமான வரித்துறை  சோதனைகள்  மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது இந்த டிமானிட்டேசன்  மூலம் , கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல் போலி நிறுவனங்கள் (shell companies) கண்டுபிடிக்கப்பட்டன. இது ஏழைகளின் நிறுவனங்கள் இல்லை. பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் நிறுவனங்கள். அவை அனைத்தையும் தடை செய்து, அதன் முதலாளிகளை மற்ற நிறுவனங்களுக்கு தலைமை தாங்க தடை செய்தது.

 

அதில் சில முக்கியமான புள்ளிகளாக திமுக, அதிமுக பிரபலங்கள். முன்னாள் காங்கிரஸ் முதல்வர்கள் மந்திரிகள் பெயர்கள் அடிபடுகிறது. இப்பொழுது இந்த நிறுவனங்களில் டெபாசிட் செய்யப்பட தொகை  ரூ. 37,500 கோடிகள்…. இந்த பணத்தை உரிமை கோரி இதுவரை யாரும் வரவேயில்லை. ஆகையால், இந்த பணமும் இப்பொழுது அரசாங்கத்துக்கு போகிறது.

 

இதை தவிர, மேலும் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் கோடிகளுக்கு ஒழுங்காக கணக்கு காண்பிக்கவில்லை. அதற்கும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் அரசாங்கத்திற்கு  வரப்போகும் பணம்.  ஆதலால்  இதுவரை பிரதமர் மோடியால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு  என பார்க்கலாம்.

 

1,37,000 கோடிகள் (ரெய்டுகள் மூலம்) + 16,000 கோடிகள் (வங்கிக்கு வராத பணம்) + 73,920 கோடிகள் தானாக முன்வந்து கட்டியது  + 37,500 கோடிகள் (shell companies)  – மொத்தம் 2,64,020 கோடிகள்.

 

மேலும் 3 லட்சம் கோடிகள் இதில் சேர வாய்ப்புள்ளது. இதை தவிர, ஆதாருடன் மானியங்களை  இணைத்ததில் அரசாங்கம் சேமித்த பணம் (இடைத்தரகர்கள் வாங்கும் கமிஷன்களை தவிர்த்ததனால்) 85,000 கோடிகள்.

 

அடுத்து ரேசன் கடைகள் மூலம் மக்களின் வரிப்பணம் கொள்ளைப்போவதை தடுக்க அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் மூலம் மட்டுமே வருடம் ஒரு லட்சத்து முப்பத்து எட்டாயிரம் கோடிகள் வரும் நாட்களில் சேமிக்க முடியும். பதுக்கல்காரர்களின் பிடியில் இருந்து ரேசன் கடைகள் மீட்கப்படும்.

 

இந்தியாவில் தயாரிப்போம் திட்டதின்  மூலம், வெளிநாடுகளிலிருந்து இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் இறக்குமதியை குறைத்து, உள்ளூரில் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியதான் சேமித்த பணம் 1 லட்சம் கோடிகள்.

 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. இதெல்லாம் யார் பணம்? நம்முடைய பணம். இந்த பணமெல்லாம் இப்பொழுது எங்கே என்று கேட்கலாம். எந்த அரசும் நேரடியாக பணத்தை கொடுத்து மக்களை சோம்பேறியாக்காது.

 

மாறாக, தொழில் முதலீடுகள், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உண்டாக்கும். அப்படி செய்ததால்தான் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிகிறது.

இதுவரை முத்ரா திட்டத்தின் மூலம் 13 கோடி பேர்கள் கடன் பெற்று தொழில் துடங்கி உள்ளனர். இதன் மூலம் 13 கோடி x 2 பேர்களுக்கு வேலை என்றால் நான்கு ஆண்டுகளில் இதன் மூலம் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை 26 கோடி பேர்கள்.

 

இன்னும் பல இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது, மின்சார வசதி ஏற்படுத்தி தருவது போன்ற விஷயங்களை செய்ய முடிகிறது. இந்திய அரசு ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தது. மோடி வந்த பொழுது பட்ஜெட்டில் இருந்த பற்றாக்குறை  4.5 % ஆக இருந்தது. அது இப்பொழுது 3.3 % ஆக குறைந்திருக்கிறது.

 

இதனால் நமக்கென்ன நன்மை?  இந்திய அரசாங்கம் மேலும் கடன் வாங்குவது, ரூபாய் நோட்டடிப்பது குறையும். இதனால் விலைவாசியும் உயராது. காங்கிரஸ் அரசின் கீழ் லட்சம் கோடிகள் ஊழல்களைத்தான் கேள்விப்பட்டு  இருக்கிறோம், இப்பொழுது லட்சக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் மிச்சமாவதை பார்க்கிறோம். இதற்கு பெயர்தான் நல்ல நிர்வாகம் மக்களே.

 

இதன் பலன் உங்களுக்கு தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...