இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இது.
தாது நஷ்டத்தைப் போக்கி ஆண் தன்மையை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இந்த இலையைப் பெருந்துண்டுகளாக நறுக்கி இதனுடன் இலவங்கப் பட்டை, ஏலக்காய், மொட்டு நீக்கிய கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு இவைகளுடன் நெய் சேர்த்து விட்டுத் தாளித்து குழம்பு வகைகள் தயாரிப்பார்கள். பதார்த்தங்களுக்கு நறுமணத்தையும் ருசியையும் கொடுப்பதுடன் எளிதில் ஜீரணிக்கவும் செய்யும் தன்மை உடையதாகும்.
இந்த இலையைப் பொன்மேனியாக வறுத்து இடித்து வஷ்திரகாயம் செய்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு வேளைக்கும் பத்து குன்றிமனியளவு கொடுத்து வந்தால் கபத்தைக் கரைக்கும். வயிற்றிலுள்ள புண்ணையும் ஆற்றும்.
You must be logged in to post a comment.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
2parochial