10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை தரும் “ஆயுஷ்மான் பாரத்”

பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்த ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள் 1000 பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடுமுழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 23-ம்தேதி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய அளவுக்கு புதியதிட்டம் ஒன்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பத்தை  சேர்ந்த 50 கோடி பேர் சிகிச்சை பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதற்கு ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டது.

மேலும், ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா அபியான்’ என்ற பெயரிலும் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களும், நகர்புறத்தைசேர்ந்த 2.33 கோடி குடும்பங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சமூக பொருளாதார சாதிகணக்கெடுப்பு அடிப்படையில் இந்த திட்டத்தில் 10.36  கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏழுவகையான பிரிவு அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.

நகர்புறங்களில் 11 வகையாக இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 வகையில் துப்புரவுதொழிலாளர்கள், பிச்சை எடுப்போர், வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள், வீதியில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்,  கட்டுமான தொழிலாளர்கள், சித்தாள்கள், கல்தச்சர்கள், கூலித் தொழிலாளர்கள், தினக்கூலிகள், பெயின்டர்கள், காவலாளிகள், தலைசுமை தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருகுடும்பத்தில் எத்தனை பேர்  இருந்தாலும் அத்தனை பேரும் அதில் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் 1,354 வகையான மருத்துவ சிகிச்சை பெறலாம். இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்து விட்டன. தெலங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதில்  இணைய வில்லை. இந்த திட்டத்தை கடந்த 23-ம் தேதி பிரதமர் மோடி அதிகாரப் பூர்வமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் துவக்கி வைத்து, 5 பேருக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கிழக்கு சிங்பூம் சர்தார் மருத்துவமனையில் 22 வயதான கர்ப்பிணி ஒருவர் முதலாவதாக பயனடைந் துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள், ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சத்தீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

One response to “10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை தரும் “ஆயுஷ்மான் பாரத்””

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.