தெலங்கானாவின் வளர்ச்சியை முடக்கியதைத்தவிர வேறு எதையும் டிஆர்எஸ் செய்யவில்லை

தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) ஆட்சியில் தெலங்கானா மாநிலத்தில் வளர்ச்சி முடங்கி விட்டது என்று பாஜக தேசிய பொது  செயலாளர் ராம் மாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.


 தெலங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ளது. ஆந்திரத்தில் இருந்து பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல்தேர்தலில் டிஆர்எஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலங்கானா தனிமாநிலப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சந்திர சேகர் ராவ், மாநிலத்தில் முதல் முதல்வரானார். சட்டப்பேரவைக் காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் நோக்கில் மாநிலப் பேரவையை அவர்கலைத்தார்.

இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் – தெலுங்கு தேசம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இதுதவிர பாஜகவும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்,  ஹைதராபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 

தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க அனைத்து தகுதிகளும் உள்ள ஒரேகட்சி பாஜக மட்டும்தான். தெலங்கானாவின் வளர்ச்சியை முடக்கியதைத்தவிர வேறு எதையும் டிஆர்எஸ் கட்சி செய்யவில்லை. மாநிலங்களில் பல்வேறு கனிமவளங்களும், ஆற்றல்மிகுந்த மனித வளமும் இருந்தும் வளர்ச்சி இல்லை. இதற்கு அரசின் நிர்வாகத்திறன் இன்மைதான் காரணம் என்றார் அவர்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...