தெலங்கானாவின் வளர்ச்சியை முடக்கியதைத்தவிர வேறு எதையும் டிஆர்எஸ் செய்யவில்லை

தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) ஆட்சியில் தெலங்கானா மாநிலத்தில் வளர்ச்சி முடங்கி விட்டது என்று பாஜக தேசிய பொது  செயலாளர் ராம் மாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.


 தெலங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ளது. ஆந்திரத்தில் இருந்து பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல்தேர்தலில் டிஆர்எஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலங்கானா தனிமாநிலப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சந்திர சேகர் ராவ், மாநிலத்தில் முதல் முதல்வரானார். சட்டப்பேரவைக் காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் நோக்கில் மாநிலப் பேரவையை அவர்கலைத்தார்.

இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் – தெலுங்கு தேசம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இதுதவிர பாஜகவும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்,  ஹைதராபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 

தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க அனைத்து தகுதிகளும் உள்ள ஒரேகட்சி பாஜக மட்டும்தான். தெலங்கானாவின் வளர்ச்சியை முடக்கியதைத்தவிர வேறு எதையும் டிஆர்எஸ் கட்சி செய்யவில்லை. மாநிலங்களில் பல்வேறு கனிமவளங்களும், ஆற்றல்மிகுந்த மனித வளமும் இருந்தும் வளர்ச்சி இல்லை. இதற்கு அரசின் நிர்வாகத்திறன் இன்மைதான் காரணம் என்றார் அவர்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...