தெலங்கானாவின் வளர்ச்சியை முடக்கியதைத்தவிர வேறு எதையும் டிஆர்எஸ் செய்யவில்லை

தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) ஆட்சியில் தெலங்கானா மாநிலத்தில் வளர்ச்சி முடங்கி விட்டது என்று பாஜக தேசிய பொது  செயலாளர் ராம் மாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.


 தெலங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ளது. ஆந்திரத்தில் இருந்து பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல்தேர்தலில் டிஆர்எஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலங்கானா தனிமாநிலப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சந்திர சேகர் ராவ், மாநிலத்தில் முதல் முதல்வரானார். சட்டப்பேரவைக் காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் நோக்கில் மாநிலப் பேரவையை அவர்கலைத்தார்.

இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் – தெலுங்கு தேசம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இதுதவிர பாஜகவும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்,  ஹைதராபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 

தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க அனைத்து தகுதிகளும் உள்ள ஒரேகட்சி பாஜக மட்டும்தான். தெலங்கானாவின் வளர்ச்சியை முடக்கியதைத்தவிர வேறு எதையும் டிஆர்எஸ் கட்சி செய்யவில்லை. மாநிலங்களில் பல்வேறு கனிமவளங்களும், ஆற்றல்மிகுந்த மனித வளமும் இருந்தும் வளர்ச்சி இல்லை. இதற்கு அரசின் நிர்வாகத்திறன் இன்மைதான் காரணம் என்றார் அவர்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.