வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் அதிகவளர்ச்சியாகும்.

2014-15 வரி செலுத்தும் ஆண்டில் மொத்தம் 88,649 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெற்றதற்கான வரிசெலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18 வரிசெலுத்தும் ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இது வரையில் நேரடிவரியாக ரூ.4.89 லட்சம் கோடி வசூலிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் வருமான வரி மற்றும் நேரடி வரிகள் வாரியம் குறித்த விவரங்களை வருமான வரித்துறையின் ஒரு அங்கமான மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் வளர்ச்சியாகும். 2014-15 வரிசெலுத்தும் ஆண்டில் மொத்தம் 88,649 பேர் ரூ.1 கோடிக்குமேல் வருமானம் பெற்றதாக அதற்கான வரி செலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18 வரி செலுத்தும் ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, மேற்கூறிய நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் வருவாய் பெறுவதாகத் தெரிவித்த நபர்களின் எண்ணிக்கையும் 68 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2014-15 வரி செலுத்தும் ஆண்டில் 48,416 ஆக இருந்த அவர்களின் எண்ணிக்கை 2017-18ஆம் வரி செலுத்தும் ஆண்டில் 81,344 ஆக உயர்ந்துள்ளது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரான சுஷில்சந்திரா, கடந்த நான்கு ஆண்டுகளில் வரித் துறையின் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகளால் தான் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டுகளில் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.

 

இதேபோல 2018-19 நிதியாண்டின் அக்டோபர் மூன்றாவதுவாரம் வரையிலான வரி வருவாய் விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் அரசின் நேரடி வரிவசூல் ரூ.4.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான வரியைவிட 15.7 சதவிகிதம் அதிகமாகும்.

  
இந்த முழு நிதியாண்டில் மொத்தம் ரூ.11.5 லட்சம் கோடியை நேரடிவரி வாயிலாக வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அக்டோபர் மாத வரி வசூலுடன் இலக்கில் 42 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் ரீஃபண்ட் தொகையாக ரூ.1.09 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலம்வரையில் ரீஃபண்ட் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 62 சதவிகிதம் அதிகமாகும்.

  இந்த நிதியாண்டின் அக்டோபர் 21ஆம்தேதி வரையில் மொத்தம் 5.8 கோடி வருமானவரி ரிட்டன்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன. முந்தைய ஆண்டில் இது 3.6 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் வருமானவரி வரம்புக்கள் புதிதாக 1.25 கோடிபேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...