வருமான வரிக்கொண்டாட்டம்- மாற்றத்திற்கான ஒரு பயணம்

வருமானவரி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு இந்தியாவில் சர் ஜேம்ஸ் வில்சன், வருமானவரியை அறிமுகப்படுத்திய இந்தத் தினம் வருமானவரி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வருமானவரி சம்பளம், சொத்து, தொழில், மூலதன ஆதாயங்கள் ஆகியவற்றில் வசூலிக்கப்படுகிறது.

2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமானவரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு முறையில் நிலையான கழிவு 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல ஓய்வூதியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் மீதான கழிவு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதலாக 50 லட்சத்திற்கும் மேல் வரிஏய்ப்பு செய்துள்ளவர்கள் மீது மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த காலத்திலிருந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வரிவிதிப்பு முறையில், ஊதியம் பெறுவோர் வருமானவரியில் ரூ.17,500 வரை பயனடைய முடியும்.

கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-20-ம் ஆண்டில் 6.48 கோடியாக இருந்த எண்ணிக்கை 2020-21-ல் 6.72 கோடியாகவும், 2021-22-ல் 6.94 கோடியாகவும், 2022-23-ல் 7.40 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...