வருமான வரிக்கொண்டாட்டம்- மாற்றத்திற்கான ஒரு பயணம்

வருமானவரி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு இந்தியாவில் சர் ஜேம்ஸ் வில்சன், வருமானவரியை அறிமுகப்படுத்திய இந்தத் தினம் வருமானவரி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வருமானவரி சம்பளம், சொத்து, தொழில், மூலதன ஆதாயங்கள் ஆகியவற்றில் வசூலிக்கப்படுகிறது.

2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமானவரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு முறையில் நிலையான கழிவு 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல ஓய்வூதியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் மீதான கழிவு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதலாக 50 லட்சத்திற்கும் மேல் வரிஏய்ப்பு செய்துள்ளவர்கள் மீது மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த காலத்திலிருந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வரிவிதிப்பு முறையில், ஊதியம் பெறுவோர் வருமானவரியில் ரூ.17,500 வரை பயனடைய முடியும்.

கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-20-ம் ஆண்டில் 6.48 கோடியாக இருந்த எண்ணிக்கை 2020-21-ல் 6.72 கோடியாகவும், 2021-22-ல் 6.94 கோடியாகவும், 2022-23-ல் 7.40 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...