பாலாகோட் சுயலாபத்துக்காக கேள்வி எழுப்புகின்றனர்

பாகிஸ்தானின் பாலாகோட்டில் பயங்கரவாத முகாம்கள்மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் குறித்து கேள்விகளை எழுப்பியதன் மூலம் எதிர்க் கட்சிகள் சுய லாபம் அடைந்துள்ளன என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்திய விமான படைத் தாக்குதலையும், துல்லியத் தாக்குதலையும், மக்களவை தேர்தலுக்கான பிரசாரங்களில் தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்றார் அவர்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜேட்லி பேசியதாவது:

ராணுவ வீரர்களின் புகைப் படங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களில் இடம்பெறக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 1971-இல் பாகிஸ்தானுடன் போர் நடந்தபோது, மொத்த எதிர்க்கட்சிகளும் அரசுக்கு ஆதரவாகநின்றன. அப்போது, ஜனசங்கத்தின் தலைவராக இருந்த வாஜ்பாய், அரசின் ஒவ்வொரு முடிவையும் ஆதரித்தார்.
ஆனால், அண்மையில் நடந்த புல்வாமா பயங்கரவாதத்தாக்குதல், இந்திய விமானப்படை பாலாகோட்டில் நடத்திய தாக்குதல் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திரமோடி மீது குற்றம்சாட்டின.

21 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை, நாட்டுநலனை கடுமையாகப் பாதித்து விட்டது. இந்தியாவை பாகிஸ்தான் இகழ்வதற்கான வாய்ப்பாக அது அமைந்து விட்டது. ஆயுதப் படைகளின் நடவடிக்கைகள் குறித்து நாட்டுமக்களின் மனதில் சந்தேகங்களை கிளப்பும்வகையில் சுயலாபத்துக்காக கேள்வி எழுப்புகின்றனர். இதைச்செய்வதன் மூலமாக தன்னைத்தானே அவர்கள் சுட்டு கொள்கின்றனர்.

ஒசாமா பின்லேடன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது, அவர்களது நடவடிக்கைகள் குறித்து யாரும் கேள்விகளை எழுப்ப வில்லை. அது குறித்து ஆதாரங்களையும் கேட்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: பயங்கர வாதத்தை நீங்கள் (பாக்.) தொடர்ந்து ஊக்கப் படுத்தினால், அதற்கான பெரும்விலையை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்பது உங்களுக்கு புரியவரும். அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...