இன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நாட்டுமக்களையே ஏமாற்றக்கூடும்.

லோகியாவின் கொள்கைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, சோஷலிஸ கட்சிகள் மகாகூட்டணி அமைக்க முயன்று வருகின்றன’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அந்தக்கட்சிகள், சோஷலிஸ கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்த ராம்மனோகர் லோகியாவைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்கின்றன. இதுதெரிந்திருந்தால், அவர் மிகவும் வருத்தப்பட்டிருப்பார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமாஜவாதி கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை குறிவைத்து பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராம் மனோகர் லோகியாவின் 109-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது வலைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

லோகியாவின் கருத்துகள் அனைத்தும் நம்மை ஊக்கப்படுத்துபவை. விவசாயத்தில் புதுமையை புகுத்துவது குறித்தும், விவசாயிகளின் பிரச்னைகளைப் போக்குவதுகுறித்தும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அவருடைய வழிகாட்டுதலில், பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகளுக்கான வருமான ஆதரவுதிட்டம் (பிஎம்-கிசான்), நீர்ப்பாசனத் திட்டம், இணையவழி விவசாய சந்தைத் திட்டம் உள்ளிட்ட பலதிட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ஜாதிப் பாகுபாடுகளையும், பாலின சமத்துவ மின்மையையும் லோகியா தொடர்ந்து கண்டித்து வந்தார். அவரைப் பின்பற்றியே, முஸ்லிம் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முத்தலாக் மசோதாவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இயற்றியது. ஆனால், லோகியாவைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் கட்சிகள், முத்தலாக் மசோதாவை எதிர்த்தன. அந்தக்கட்சிகள் அனைத்தும் வாக்குவங்கி அரசியலைக் கடைப்பிடித்து வருகின்றன.

லோகியா உரையாற்றத் தொடங்கினால், காங்கிரஸ் கட்சி அச்சத்தின் உச்சத்துக்குச் சென்று விடும். காங்கிரஸ் ஆட்சியின் கீழ், விவசாயம், தொழில்துறை, பாதுகாப்புத் துறை என எந்தத்துறையும் வளர்ச்சி அடையவில்லை என்று லோகியா ஒரு முறை கூறியிருந்தார்.
அவர் அப்போது கூறியது, இந்தக் காலத்துக்கும் பொருத்தமாகவே இருக்கிறது. அதற்கு அடுத்து பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசுகளும், விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்புடை யவர்களின் நிறுவனங்களை  தவிர மற்றவை வளர்ச்சி அடையவில்லை; தேசப்பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

அத்தகைய காங்கிரஸ் கட்சியுடன் பிராந்தியகட்சிகள் கூட்டணி அமைத்துவருகின்றன. இது முரண்பாடானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். இன்று லோகியா உயிரோடு இருந்திருந்தால், அவர்மிகவும் வருத்தப்பட்டிருப்பார். லோகியாவைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கட்சிகள், அவரின் சோஷலிஸ கொள்கைகளைக் கைவிட்டுவிட்டன. அக்கட்சிகள் லோகியாவை அவமதித்துள்ளன.

இந்தக்கட்சிகள் அனைத்தும் பதவிக்கு வரத்துடிப்பதையும், பதவிக்கு வந்தபின் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதையுமே கொள்கைகளாகக் கொண்டுள்ளன.

குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே இக்கட்சிகள் செயல்படும் என்பதால், அவர்களது ஆட்சியில், ஏழைமக்களுக்கும், பழங்குடியினருக்கும், தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பெண்களுக்கும் எந்தப்பாதுகாப்பும் இருக்காது.

இன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நாட்டுமக்களையே ஏமாற்றக்கூடும். எனவே, அவர்களுக்கு நாட்டை ஆளவாய்ப்பு அளிக்க வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...