அரக்கோணம் அம்பானி – ஜெகத்ரட்சகன் குறித்து திமுக மவுனம் ஏன்

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் அரக்கோணம் தொகுதியின் வேட்பாளருமான ஜகத்ரட்சகன் நிறுவனம் சுமார் 12,000 கோடி ரூபாயை, இலங்கையின் மிகப்பெரிய வெளிநாடு தொழில் முதலீடு செய்துள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவால் சீனாவின் உதவியோடு உருவாக்கப்பட்டது. இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு தொல்லை தர விரும்பினால், இந்த துறைமுகம் சீனாவுக்கு மிகப்பெரிய பலம்.

இந்த துறைமுகத்திற்கு அருகே சுமார் 25,000 கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இலங்கை முடிவு செய்துள்ளது, இதற்கான பணிகள் அடுத்த வாரம் துவங்கவுள்ளது. இரண்டு நாட்கள் முன்பு இலங்கை அதிகாரபூர்வமாக இதை அறிவித்தபோது தான் ஜகத்ராட்சகன் நிறுவனத்தின் முதலீடு குறித்து தெரிய வந்தது.

சுமார் 12,000 கோடி ரூபாயை Silver Park International நிறுவனம் முதலீடு செய்கிறது. இந்த Silver Park International நிறுவனம் Accord Life Spec Pvt Ltd நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இரண்டு நிறுவனங்களிலும் ஜகத்ராட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இயக்குனர்கள். இரண்டுமே சென்னையில் உள்ள ஒரே முகவரியில் தான் இயங்கி வருகிறது.

2014ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த பிராமண பத்திரத்திலும், Accord Life Spec Pvt Ltd நிறுவனம் குறித்து ஜெகத்ரட்சகன் குறிப்பிட்டுள்ளார். அந்த பிரமாண பத்திரத்தின் படி அவர் மற்றும் மனைவியின் சொத்துக்கள் மதிப்பு 78 கோடி ரூபாய்.

இப்போது நமக்கு எழும் கேள்விகள்

1. ஐந்து ஆண்டுகள் முன்பு 78 கோடி ரூபாய் தான் சொத்து இருந்த நிலையில், தற்போது 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது?

2. 12,000 கோடி முதலீடு செய்யுமளவிற்கு முடியுமென்றால், இவரது ஒட்டு மொத்த சொத்து மதிப்பு என்ன?

3. கல்வி நிறுவனம் மற்றும் மதுபான ஆலை நடத்தி வருகிறார் இவர். இவ்வளவு சொத்து வந்திருக்கிறது என்றால், கல்வி நிலையத்தில் வாங்கும் நன்கொடை என்ன?

4. இது இவரது பணமா அல்லது வேறு யாரோ ஒருவரின் பணமா? வேறு ஒருவரின் பணம் என்றால், யார் அந்த நபர்?

5. மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கிறார் என்று கூறும் திமுக, இலங்கையின் மிகப்பெரிய தொழில் முதலீட்டை செய்துள்ள ஜெகத்ரட்சகனுக்கு ஏன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார்?

6. இந்த குற்றச்சாட்டு எழுந்து 2 நாட்கள் ஆகியும், ஜகத்ராட்சகனோ, ஸ்டாலினோ தொடர் மவுனம் சாதிப்பது ஏன்?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...