விண்வெளியிலும் ‘சவுகிதார்’;

மக்களின் ஆதரவு இல்லாமல் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், வளர்ச்சி பணிகளைச் செய்யமுடியாது. வரும் மக்களவை தேர்தலில் பாஜக தொண்டர்களின் ஆதரவு, மக்களின் ஆதரவும், ஆசியும் எங்களுக்குத்தேவை.

ஓடிசா மாநிலத்தில் எந்த விதமான மாற்றத்தையும் கொண்டு வராமல் எந்த விதமான மேம்பாட்டு பணிகளையும் செய்யமுடியாது.

இளைஞர்கள் மற்றும் ஏழைமக்களின் நல்வாழ்வுக்காக எங்கள் அரசு பாடுபடுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் ஒடிசா இரட்டைவளர்ச்சியை பெறும். இங்குள்ள பழங்குடியினர், விவசாயிகள், இளைஞர்களுக்கு தேவையான வருமானம் கிடைத்தால் மட்டுமே வலிமையுள்ள மாநிலமாக ஒடிசா மாறமுடியும்.

மக்களின் ஆதரவு இல்லாமல் எங்களால் எந்தமுன்னேற்ற திட்டத்தையும் முன்னெடுத்து செல்லமுடியாது.

விண்வெளியில் நமது செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க நாங்கள் காவலாளியை (சவுகிதார்) உருவாக்கி இருக்கிறோம். நமது செயற்கைக்கோளுக்கு ஊறுவிளைக்கும் எந்த செயற்கைக் கோளையும் தாக்கி அழிக்கும் வல்லமை உடைய ஏவுகணையைக் கண்டுபிடித்துள்ளோம். அதற்கான மிஷன் சக்தி சோதனையையும் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளோம்.

ஆனால், விண்வெளியில் நாம் படைத்த சாதனையை எதிர்க்கட்சிகள் இகழ்ந்து பேசுகிறார்கள். நம்முடைய ஏ-சாட் தொழில்நுட்ப சாதனையை இழிவாகப்பேசும் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலில் தகுந்த பதிலை நீங்கள் அளிக்கவேண்டும். உறுதியான முடிவுகளை அரசு எடுப்பதற்கு பெரும்பான்மை அரசு தேவை. குரல்கொடுப்பதற்காக அரசு அல்லாமல் நிலையான அரசு அமைய வாக்களிக்க வேண்டும்.

உங்களுக்கு வலிமையான அரசு வேண்டுமா அல்லது உதவிசெய்ய இயலாத அரசு வேண்டுமா என்பதை பார்த்து வாக்களியுங்கள்.

பாலகோட்டில் நமது விமானப்படை நடத்திய தாக்குதல் நடத்தி ஒருமாதம் ஆகிவிட்டது. ஆனால், பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளின் உடல்களை இன்னும் கணக்கிடுவதில் தீவிரமாக இருந்துவருகிறது. ஆனால், நம்முடைய எதிர்க்கட்சிகள் அந்த தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்கள்.

தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா செயல்படும் போது, நேரடியாக எதிரிகளின் இடத்துக்கு சென்று அவர்களை தாக்குவோம். ஆனால், சிலர் அதற்கு ஆதாரம்கேட்கிறார்கள்”.

இவற்றை எல்லாம் நாம் சகித்துக்கொள்ள வேண்டுமா? நமது படைகளின் வீரத்தையும், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும் இழிவாக பேசும் இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிக்கவேண்டும்.

வெற்று கோஷங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் வேண்டுமா? அல்லது, துணிச்சலான முடிவெடுத்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் வேண்டுமா? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஒடிசா மாநிலம், கோரபுட் மாவட்டம், ஜேப்பூரில் நடந்த பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...