எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது – பிரதமர் மோடி

”இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமமும், எந்த குடும்பமும், எந்த குடிமகனும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதுதான்” என பிரதமர் மோடி பேசினார்.

டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எங்கள் அரசு செயல்படுத்தி வரும் கொள்கைகள் அடுத்த 100 ஆண்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும். இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமமும், எந்த குடும்பமும், எந்த குடிமகனும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதுதான். ஏழைகளின் பிரச்னைகளை அரசு ஊழியர்கள் கேட்க வேண்டும்.

அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் முன்னுரிமை கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். இன்று நாம் வேகமாக மாறிவரும் உலகில் இருக்கிறோம். வேகமாக மாறி வரும் காலங்களில் உலகளாவிய சவால்களை நாம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இன்னும் ஒரு பெரிய சவாலாக இருப்பதை காண்கிறீர்கள். இது ஒரு பெரிய நெருக்கடி. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் அரசு ஊழியர்கள். நீங்கள் வெறும் அரசு ஊழியர் மட்டுமல்ல, புதிய இந்தியாவின் கைவினைஞர்கள். கடந்த 11 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வெற்றிகள், வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை பெரிதும் வலுப்படுத்தியுள்ளன.

இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...