பிரக்யா சிங்கை என்னால் மன்னிக்க முடியாது

கோட்சேவை தேச பக்தர் எனக் கூறிய சாத்வி பிரக்யா சிங்கை மன்னிக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒருஹிந்து; அவரது பெயர் கோட்சே’ என, மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான, கமல்கூறியிருந்தார். இதுகுறித்து, ம.பி., மாநிலம் போபாலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்யா சிங் கூறியதாவது: நாதுராம் கோட்சே, ஒருதேசபக்தராக இருந்தார்; அவரை பயங்கரவாதி என்பவர்கள், கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்க்கட்டும். அவர்களுக்கு, தேர்தலில், மக்கள் பதிலடி கொடுப்பர்.இவ்வாறு, அவர்கூறினார். இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக டிவி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: மஹாத்மா காந்தி, கோட்சே குறித்து தெரிவிக்கப் பட்ட கருத்துகள் தவறானவை. மோச மானவை. தனது பேச்சிற்காக பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால், அவரை என்னால், மன்னிக்க முடியாது எனக்கூறியுள்ளார.

இதனிடையே, கோட்சே குறித்த பிரக்யாசிங், மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே, எம்.பி., நலீன் குமார் கதீல் ஆகியோரின் கருத்துகள் கட்சியின் கொள்கைக்கு உட்பட்டதல்ல. இது அவர்களின் தனிப்பட்ட கருத்து. பா.ஜ., ஒன்றும் செய்யமுடியாது. 3 பேரும் தங்களின் கருத்துகளை திரும்ப பெற்றுகொண்டு, மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்களின் கருத்துகள் கட்சியின் கொள்கைக்கு எதிராக உள்ளதால், அவர்களுக்கு விளக்கம்கேட்டு 10 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்பப்படும் எனக்கூறினார். இதனை தொடர்ந்து 3 பேருக்கும் பா.ஜ.,ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...