நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

 நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, திட்டமிட்ட உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
அப்படி செய்தால்,

இரத்தத்தில் சர்க்கரையை ஒரே சீரான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

இரத்தத்தில் கொழுப்பின் அளவை – (கொலஷ்ட்ராலின் அளவைக்) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.

உடல் எடை கூடாமல்-(பருமனாக ஆகி விடாமல்) வைத்துக் கொள்ள முடியும்.

இவற்றின் காரணமாக, நீரிழிவுநோயால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுக்க முடியும்.

தவிர்க்க வேண்டியன
நீரிழிவுநோய் உள்ளவர்கள் முக்கியமாகத் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
கொழுப்பு உணவுகள்
உணவில் எண்ணெய் சேர்த்துக் கொள்வது.
சர்க்கரை-இனிப்பு வகைகள்.
மது அருந்துவது.
மாமிச உணவுகள் குறிப்பாக பன்றி, மாடுகளின் இறைச்சி உணவுகள்.
எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவு வகைகள்

காரட், பீட்ரூட், வாழைப்பழம், உருளைக்கிழங்கு ஆகியன

சேர்த்துக் கொள்ள வேண்டியன.

நாள்தோறும் பச்சைக் காய்கறிகளை நிரம்பச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவில் நார்ச்சத்துள்ளவை, கொட்டை வகைகள் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மீன் வகைகளில் புரதச்சத்து (புரோட்டீன்) அதிகம் இருக்கிறது. எனவே மீன் வகைகளை வறுத்து, பொரித்து அல்லது வேறு வடிவில் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சர்க்கரையின் அளவு இரத்தத்தில் குறைகிறது.

சிக்கன் எனப்படும் கோழிக்கறியும் இதைப் போன்றே பயன் தருவதாக உள்ளது.

இவற்றைப் பயன்படுத்தும் வேளைகளில், இவற்றில் பயன்படுத்தும் எண்ணெயைப் போதுமான அளவு அல்லது குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...