ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பா.ஜ.க  சார்பில் ‘எல்லா இடத்திலும் பா.ஜனதா; எல்லோர் இடத்திலும் பா.ஜனதா’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் உறுப்பினர்சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மத்திய சட்டம் மற்றும் தகவல்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். மேலும், உறுப்பினர் சேர்க்கை பிரசார வாகனத்தையும் தொடங்கிவைத்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் 8980808080 என்ற எண்ணை அழுத்தி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார்.

நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது, “பா.ஜனதா 11 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே பெரியகட்சியாக விளங்குகிறது. பா.ஜனதாவில் சாதாரண தொண்டர்கள்கூட தலைவர்கள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும் என்பது இல்லை. தமிழகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் உதிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கூட அவர்களுக்குதான் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நடந்துமுடிந்த தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா பின்னடைவை சந்தித்தது. இந்தபின்னடைவை பின்னுக்கு தள்ளி உறுப்பினர் சேர்க்கையின் மூலம் வரும்காலத்தில் தமிழகத்தில் பாஜனதாவை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசிய தாவது:-
பா.ஜனதா தொண்டர்களின் கட்சி. ஒருகுடும்பத்துக்கு சொந்தமான கட்சி அல்ல. அமித்ஷா, நிதின் கட்காரி, ராஜ்நாத்சிங், நான் (ரவிசங்கர் பிரசாத்) உள்பட அனைவரும் சாதாரண தொண்டர்களாக இருந்து இந்த அளவிற்கு தலைவர்களாக உயர்ந்துள்ளோம். பிறகட்சியினருக்கு அவரவர் குடும்பத்தினரே பிரதானம். பா.ஜனதாவில் 75 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மக்கள் பங்கெடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு வெற்றிபெற்று தந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே போலீசாரை ஏவி அடக்கு முறையை கையாளுகிறார் மம்தா பானர்ஜி. ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை கோஷம். அதனை அடக்கமுடியாது. விரைவில் கேரளாவில் பா.ஜ.க வெற்றிபெற போகிறது. தமிழகத்திலும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது போன்று தாமரை மலர்ந்தேதீரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...