ஓய்வூதியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் குடும்ப ஓய்வூதியக் குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று  தொடங்கி வைத்தார்.

தேச நிர்மாணப்பணியில் ஓய்வூதியதாரர்கள் சம பங்குதாரர்கள் என்று வர்ணித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். எளிதாக ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் ஓய்வூதியதாரர்களைக்கௌரவிப்பது நமது கடமை என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உணர்திறனுடன் முடிவுகளை எடுத்துள்ளதாக   டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.

60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் கணிசமான எண்ணிக்கையை புறக்கணிக்க முடியாது என்றும், ஓய்வூதியம் சமூக-பொருளாதார தாக்கத்தை உருவாக்குகிறது, இதனால் அவர்கள் கண்ணியத்துடன் வாழ அதிகாரம் அளிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் தமது துறை எடுத்த முயற்சிகளை எடுத்துரைத்தார். CPENGRAMS இணையதளத்தில் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதிய வழக்குகளை உரிய நேரத்தில் தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு முகாம் ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நீடிக்கும். 46 துறைகள் / அமைச்சகங்களின் 1891 குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகள் முகாமிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...