மேட்டுப்பாளையம்: பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான ‘சங்கதன் பர்வா,சதாஸ்யத அபியான் 2024’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று (செப்.,10) உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை பொன்விழா நகர் பகுதியில் துவக்கி வைத்தார்.
அப்போது, அப்பகுதியில் இருந்த மக்களிடம் மொபைல் செயலி மூலமாக ஆன்லைனில் உறுப்பினர் பதிவு மற்றும் வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.
அப்போது, பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், நீலகிரி தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் நந்தகுமார், காரமடை கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |