பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண்

ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.100 அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவில் உள்ள சுந்தர்கர்க் மாவட்டத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு சிவப்பு நிற ஆடை அணிந்தபடி, பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை முகாமில் நின்று கொண்டிருந்த ஒடிசா மாநில பா.ஜ., துணைத்தலைவர் பைஜெயந்த் ஜெய்பாண்டாவிடம் சென்றுள்ளார். தாம் கையில் வைத்திருந்த 100 ரூபாயை அவரிடம் தந்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறி, அவரிடம் இந்த ரூ.100ஐ வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பழங்குடியின பெண்ணின் இந்த செயலைக் கண்டு வியந்த பைஜெயந்த் ஜெய் பாண்டா இந்நிகழ்வை தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் விரிவாக பதிவிட்டு உள்ளார். பழங்குடியின பெண் ரூ.100 தரும் போட்டோவையும் அதில் வெளியிட்டு இருக்கிறார்.

தமது எக்ஸ் வலைதள பதிவில் அவர் கூறி இருப்பதாவது; ஒடிசா சுந்தர்கர்க் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அங்கு வந்த ஒடிசா ஆதிவாசிப் பெண் ஒருவர் 100 ரூபாயை பிரதமரிடம் தருமாறு கூறினார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்பதையும் கூறுமாறு தெரிவித்தார்.

அந்த பணத்தை நான் வேண்டாம் என்று கூறி விளக்கினேன். ஆனால் அப்பெண்மணி அதை மறுத்துவிட்டார். பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவே இல்லை. இதுதான் ஒடிசா மற்றும் பாரதம் உணரும் மாற்றத்தின் பிரதிபலிப்பு. ஜெய் ஜெகன்நாத் என்று பதிவிட்டுள்ளார்.

பைஜெயந்த் ஜெய்பாண்டாவின் வலைதள பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது:

இந்த அன்பு என் உள்ளத்தை நெகிழ செய்துவிட்டது. எப்போதும் ஆசிர்வதிக்கும் உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன். உங்களின் ஆசி வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்வேகத்தை எனக்கு தருகிறது.

இவ்வாறு தமது பதிவில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...