மம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றியது

மம்தா பானர்ஜியின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு உதவியுள்ளது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சௌதரி விமரிசித்துள்ளார்.

17-வது மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் பாஜக 18 இடங்களில் வெற்றிபெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இடதுசாரிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதுவே, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றிருந்த இடம் வெறும் 2, திரிணமூல் காங்கிரஸ் வென்றிருந்த இடம் 34 என்பது குறிப்பிடதக்கது.

கடந்த மக்களவைத் தேர்தலில் 16 இடங்களைக் கூடுதலாகவென்றதன் மூலம் பாஜக மேற்குவங்க மாநிலத்தில் தனக்கான அரசியல் இடத்தை உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சௌதரி பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு மம்தாவே பொறுப்பு என்று விமரிசித்துள்ளார். இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியவர்,

“மேற்கு வங்கத்தில் பாஜக கால் ஊன்றியதற்கு மம்தாபானர்ஜி மற்றும் அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் தான் காரணம். பாஜகவுக்கு இடமளிக்கும் வகையில் மம்தா மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே எதிர்க் கட்சிகளை வலுவிழக்கச் செய்தது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...