மம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றியது

மம்தா பானர்ஜியின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு உதவியுள்ளது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சௌதரி விமரிசித்துள்ளார்.

17-வது மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் பாஜக 18 இடங்களில் வெற்றிபெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இடதுசாரிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதுவே, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றிருந்த இடம் வெறும் 2, திரிணமூல் காங்கிரஸ் வென்றிருந்த இடம் 34 என்பது குறிப்பிடதக்கது.

கடந்த மக்களவைத் தேர்தலில் 16 இடங்களைக் கூடுதலாகவென்றதன் மூலம் பாஜக மேற்குவங்க மாநிலத்தில் தனக்கான அரசியல் இடத்தை உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சௌதரி பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு மம்தாவே பொறுப்பு என்று விமரிசித்துள்ளார். இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியவர்,

“மேற்கு வங்கத்தில் பாஜக கால் ஊன்றியதற்கு மம்தாபானர்ஜி மற்றும் அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் தான் காரணம். பாஜகவுக்கு இடமளிக்கும் வகையில் மம்தா மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே எதிர்க் கட்சிகளை வலுவிழக்கச் செய்தது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...