நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது

மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதி பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அவர், “ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளையும் திரும்பப் பெறுவதற்கான சட்டவாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறேன்.

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ள அதேவேளையில் ஊழல் வாதிகள் அனைவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள கைகோத்துள்ளனர். மேற்குவங்க மக்கள் மாற்றத்துக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

பிரதமர் மோடி தொலை பேசியில் பேசிய இரண்டாவது பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய் ஆவார். இவரது கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா போட்டியிடுவதால் இத்தொகுதி கவனம்பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க் கிழமை மேற்கு வங்கத்தின் பசீர்ஹட் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகாபத்ராவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ‘நீங்கள் சக்தியின்சொரூபம்’ என்று அவரை பாராட்டினார்.

சந்தேஷ்காலியில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் ஷாஜகான்ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராககுரல் எழுப்புவதில் ரேகா முக்கியப்பங்கு வகித்தார்.

பசீர்ஹட் மக்களவைத் தொகுதியின்கீழ் உள்ள கிராமத்தை சேர்ந்த ரேகா பத்ராவை, அத்தொகுதி வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 6-ம் தேதி பராசத்நகரில் பிரதமர் நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்துக்கு இடையில் பிரதமரை சந்தித்து சந்தேஷ்காலி பெண்களின் துயரத்தை பிரதமரிடம் விவரித்தபெண்கள் குழுவில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரதுகூட்டாளிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

இவர்களின் நிலஅபகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...