பில்கேட்ஸ் அறக்கட்டளையின் விருதை பெற்றார் மோடி

தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டாகேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு “குளோபல் கோல்கீப்பர்’ விருது செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.

ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப் பட்டுள்ள “நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு’களை அடைவதற்கான முயற்சிகளை தங்கள் நாட்டிலோ அல்லது பல்வேறு நாடுகளிலோ வெற்றிகரமாகச் செயல் படுத்தும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு “குளோபல் கோல்கீப்பர்’ விருதை பில் மற்றும் மெலிண்டா அறக் கட்டளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், “தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் நாட்டுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த இலக்கை அடைவதற்கு பிரதமர் மோடி வழங்கிய பங்களிப்புக்காக, இந்த ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விருதுவழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அறக்கட்டளை இணை நிறுவனர் பில் கேட்ஸிடமிருந்து “குளோபல் கோல்கீப்பர்’ விருதைப் பெற்று, பிரதமர் மோடி பேசியதாவது:

மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினத்தில் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்குமட்டும் கிடைத்த விருது அல்ல; நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்தவிருது. “தூய்மை இந்தியா’ திட்டத்தின் வெற்றி மிகச் சிறப்பானது. இத்திட்டமானது, நாட்டிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள “நீடித்தவளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கும் உதவியது.

சமர்ப்பணம்: “தூய்மை இந்தியா’ திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய வர்களுக்கும், அன்றாடப் பணிகளில் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் களுக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...