எனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷர் ரோலர்

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜிஜின்பிங் ஆகிய இருவரும் கடந்த இருநாள்களாக சென்னையில் நடந்த பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். சுமார் 63 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன அதிபர் ஒருவர் தமிழகம் வந்திருந்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப் பட்டது.

சீன அதிபரும் இந்தியப் பிரதமரும், முதல்நாள் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பின் போது, யாரும் எதிர்பார்க்காத விதமாகப் பிரதமர் மோடி, தமிழர்களின் கலாசாரமான வேட்டிசட்டை அணிந்துவந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இது, தமிழர்கள் உட்பட இந்திய மக்களின் வரவேற்பைப்பெற்றது.

மறுநாள், இரு நாட்டுத் தலைவர்களும் கோவளத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், காலை 10 மணிக்கு நேரில் சந்தித்துப்பேசினர். இவர்களின் சந்திப்புக்கு முன்னதாக மோடி, கோவளம் கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, கடற்கரையிலிருந்த குப்பைகளை அள்ளி தூய்மைப் படுத்தினார். இந்தவீடியோவை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “நாம் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

மோடி வெளியிட்டிருந்த வீடியோவும் அவரின் புகைப்படங்களும் தேசியளவில் கவனம் ஈர்த்தது. அவருடன் சேர்ந்து, பிரதமர் கையில் வைத்திருந்த கருவி பற்றியும் அதிகமாக பேசப்பட்டது. அது என்ன கருவி? பிரதமர் எதற்காக அதைக்கையில் வைத்துள்ளார்” எனப் பலரும் பிரதமரின் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது, அந்தக் கேள்விக்கு மோடியே பதில் அளித்துள்ளார்.

“மகாபலிபுரம் கடற்கரையில் நான் நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, என் கையில் வைத்திருந்த கருவி குறித்து பலரும் நேற்றுமுதல் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அது, நான் அடிக்கடி பயன்படுத்தும் அக்குபிரஷர் ரோலர் கருவி. அது, எனக்கு மிகவும் உதவியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...