எனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷர் ரோலர்

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜிஜின்பிங் ஆகிய இருவரும் கடந்த இருநாள்களாக சென்னையில் நடந்த பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். சுமார் 63 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன அதிபர் ஒருவர் தமிழகம் வந்திருந்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப் பட்டது.

சீன அதிபரும் இந்தியப் பிரதமரும், முதல்நாள் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பின் போது, யாரும் எதிர்பார்க்காத விதமாகப் பிரதமர் மோடி, தமிழர்களின் கலாசாரமான வேட்டிசட்டை அணிந்துவந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இது, தமிழர்கள் உட்பட இந்திய மக்களின் வரவேற்பைப்பெற்றது.

மறுநாள், இரு நாட்டுத் தலைவர்களும் கோவளத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், காலை 10 மணிக்கு நேரில் சந்தித்துப்பேசினர். இவர்களின் சந்திப்புக்கு முன்னதாக மோடி, கோவளம் கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, கடற்கரையிலிருந்த குப்பைகளை அள்ளி தூய்மைப் படுத்தினார். இந்தவீடியோவை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “நாம் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

மோடி வெளியிட்டிருந்த வீடியோவும் அவரின் புகைப்படங்களும் தேசியளவில் கவனம் ஈர்த்தது. அவருடன் சேர்ந்து, பிரதமர் கையில் வைத்திருந்த கருவி பற்றியும் அதிகமாக பேசப்பட்டது. அது என்ன கருவி? பிரதமர் எதற்காக அதைக்கையில் வைத்துள்ளார்” எனப் பலரும் பிரதமரின் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது, அந்தக் கேள்விக்கு மோடியே பதில் அளித்துள்ளார்.

“மகாபலிபுரம் கடற்கரையில் நான் நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, என் கையில் வைத்திருந்த கருவி குறித்து பலரும் நேற்றுமுதல் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அது, நான் அடிக்கடி பயன்படுத்தும் அக்குபிரஷர் ரோலர் கருவி. அது, எனக்கு மிகவும் உதவியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...