பிரதமர் மோடிக்கு குவைத்தின் ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற உயரிய விருது

இந்தியா – குவைத் இடையேயான உறவுகள், பல்துறைகளில் ஒத்துழைத்து, இணைந்து செயல்படும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக இரு நாட்டு தலைவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டனர்.

மேற்காசிய நாடான குவைத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். கடந்த 1981ல் அப்போதைய பிரதமர் இந்திரா அங்கு சென்றார். 43 ஆண்டுகளுக்குப் பின், இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் பயணமாக இது அமைந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு ஏற்கனவே உள்ளது. இரு தரப்பு வர்த்தகம், 2023 – 2024ல், 89,000 கோடி ரூபாயாக இருந்தது.

நம் நாட்டின் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியில், ஆறாவது பெரிய நாடாக குவைத் உள்ளது. நாட்டின் மொத்த பெட்ரோலியப் பொருட்களின் தேவைகளில், 3 சதவீதம் அந்த நாட்டில் இருந்து பெறப்படுகிறது.

குவைத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி முதல் முறையாக, 17,000 கோடி ரூபாயை சமீபத்தில் தாண்டியுள்ளது. அதே நேரத்தில், குவைத் முதலீட்டு ஆணையம், நம் நாட்டில், 85,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளது.

இந்த நிலையில், குவைத் மன்னர் ஷேக் மஷேல் அல் அஹமது அல் ஜபார் அல் ஷாபாவின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அங்கு சென்றார். குவைத் வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு உட்பட பல நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் பங்கேற்றார்.

குவைத் மன்னரை நேற்று அவர் சந்தித்து பேசினார். முன்னதாக, குவைத் மன்னர் அரண்மனையில், மோடிக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது, தகவல் தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு, நிதி தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உட்பட பல துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

இரு நாட்டுக்கு இடையே நீண்ட வர்த்தக உறவு இருந்தாலும், அது பல துறைகளில் ஒத்துழைத்து, இணைந்து பணியாற்றும் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளதாக இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, பட்டத்து இளவரசர் ஷேக் ஷபா அல் காலித் அல் ஷாபாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக இருவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பரஸ்பரம் பாராட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

‘பிரதமர் மோடியின் இந்த பயணத்தால், இரு நாட்டுக்கு இடையேயான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது’ என, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குவைத் மன்னருடனான பேச்சுக்கு முன், ‘ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற அந்நாட்டின் மிகவும் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை, குவைத் மன்னர் வழங்கி கவரவித்தார். இரு தரப்பு உறவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக, குவைத் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் சேர்த்து, பிரதமர் மோடிக்கு இதுவரை, 20 நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...