கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்க சீதபேதி குணமாகும்.
அம்மை போட்டபின் முகத்தில் பள்ளம் பள்ளமாக வடு தோன்றும். இதைப் போக்க கறிவேப்பிலை 3௦ கிராம், கசகசா 15௦ கிராம், கஸ்தூரி மஞ்சள் 8 கிராம் இவைகளை மைபோல அரைத்து முகத்தில் கனமாகத் தடவி அரை மணிக்குப் பின் கழுவி விடவும். 7 நாட்கள் செய்தால் வடு மாறும்.
இதை மனத்துக்காக குழம்பு, சாம்பார், காய்கறிகளில் சேர்ப்பது உண்டு. துவையல் செய்தும் உண்ணலாம். சுரம், பித்தம் தீரும். அருசியை மாற்றும். பசி உண்டாக்கும். தீனிப்பைக்கு வலிவு கொடுக்கும். இத்துடன் நெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.