எங்கள் தீர்ப்பை மதியுங்கள் என மக்கள் கேட்கிறார்கள்

மகாராஷ்டிராவை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், செய்தசதியை பாஜக முறியடித்துள்ளது என்று, மத்திய அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் அஜித் பவாருடன் இணைந்து, பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இது குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

அரசு அமைப்பதற்காக ஆளுநர் வாய்ப்பு கொடுத்த போதிலும், இதுவரை, சிவசேனா உரிமை கோரவில்லை. மற்றொரு பக்கம், பாஜக 2014 ஆம் ஆண்டைவிட மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே, இதில் பாஜகவை சிவசேனாவால் எந்தவகையிலும் குறை சொல்ல முடியாது.

தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் என்று தான், தேர்தலில் பிரச்சாரம் செய்தோம். மக்கள் அதற்காகவே, பாஜக-சிவசேனா கூட்டணிக்கு வாக்களித்தனர். இப்போது அவருக்கே முதல்வர்பதவியை தர முடியாது என சிவசேனா கூறியது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.

மக்களின் தீர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாக இருந்த போதிலும், இது வரை ஏன் ஆட்சியை அமைக்க பாஜக முன்வர வில்லை, என்று மகாராஷ்டிராவில் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். உங்களுக்கு அதிக எம்எல்ஏக்களை கொடுத்தோம், ஆனால் நீங்கள் ஏன், இந்த அசுத்தமான கூட்டணியை உருவாக அனுமதிக்கிறீர்கள் என பாஜகவை பார்த்து மக்கள்கேட்கிறார்கள். எங்கள் தீர்ப்பை மதியுங்கள் என மக்கள் சொல்லும்போது, அதை ஏற்றுத்தானே ஆக வேண்டும்.

சிவசேனா அதன் மதிப்புகளை “தனி பட்ட லாபங்களுக்காக” விட்டுக் கொடுத்தது. தனிப்பட்ட லாபங்களுக்காக ஒரு அசுத்தமான கூட்டணியை உருவாக்கிய வர்கள்தான் உண்மையில் சதி செய்தவர்கள். பாஜக அல்ல. காங்கிரசும் என்சிபியும் எங்களை, எதிர்க் கட்சியில் அமர வேண்டும் என்று மக்கள் ஆணையிட்டுள்ளனர், அதை ஏற்போம் என்று கூறிவந்தனர். இப்போது திடீரென்று நாற்காலியை பிடிக்க அவர்களுக்கு ஆசைவருவது சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...