மகாராஷ்டிரா ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்றுகட்சிகள் இணைந்து மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்திவந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென போர்க் கொடி தூக்கினார் சிவசேனா கட்சியின் மூத்ததலைவரான ஏக்நாத் ஷிண்டே. முதலில் பத்திற்கும் மேற்பட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கியிருந்த அவர், தனக்கானபலம் அதிகரிக்க அதிகரிக்க அசாம் மாநிலம் கவுகாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு இடம்பெயர்ந்தார். 9 அமைச்சர்கள் உட்பட 36 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத்ஷிண்டே விற்கு ஆதரவு வழங்கினர்.

வெறும் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்திற்கும் குறைவான அமைச்சர்கள் கொண்டு ஆட்சி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிவசேனாவின் தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ்தாக்கரே தடுமாறி வருகிறார். தங்களது கூட்டணி தொடரும் என காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தெரிவித்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீட்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். அமைச்சர்களுக்கான பதவிபறிப்பு உள்ளிட்டவை செய்தும் அது பலனளிக்கவில்லை

இதற்கிடையில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய அவர் எடுத்த முயற்சி உச்ச நீதிமன்றத்தால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள நிலையில் புதுவேகம் கொண்டுள்ள ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள்குறித்து யோசனை செய்துவருகிறார். இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் இணைந்து மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைபிடிக்கும் முனைப்பில் உள்ளது.

இன்று பிற்பகல் அவசரமாக டெல்லிவிரைந்த மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடன் ஆலோசனை நடத்திவருகிறார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் இணைவது அவர்களுக்கான மந்திரி பொறுப்புகள், ஏக்நாத் ஷிண்டேவிற்கான முக்கியப்பதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப் படுவதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும்மீண்டும் சொல்வது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்ததுதவறு என்பதுதான். எனவே அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகஇருப்பதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...