தன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்

தன்னலத்தைக் காட்டிலும் தேசத்தின் நலனுக்குத்தான் நாட்டுமக்கள் அனைவரும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

மேலும், பொதுவாழ்வில் தூய்மையும், செயலில் நோ்மையும் கொண்ட அரசியல் தலைவா்களை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

‘துக்ளக்’ வார இதழின் 50-ஆவது ஆண்டுவிழா சென்னை, கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், விழாசிறப்பு மலரை குடியரசுத் துணைத் தலைவா் வெளியிட, அதனை நடிகா் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டாா். அதைத் தொடா்ந்து, வெங்கய்ய நாயுடு பேசியது:

பொதுவாழ்விலும் சரி; நான் சாா்ந்திருந்த கட்சியிலும் சரி, பல்வேறு பொறுப்புகளையும், உயா்பதவிகளையும் வகித்திருக்கிறேன். ஆனால், அந்த காலகட்டங்களில் கூட பொங்கல், மகரசங்கராந்தி பண்டிகைகளின்போது எந்த பொது விழாக்களிலும் பங்கெடுத்தது கிடையாது. பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தபோதுகூட அந்த வழக்கத்தை நான் மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது முதன்முறையாக பொங்கல் பண்டிகை தினத்தில் ‘துக்ளக்’ விழா மேடைக்கு வந்துள்ளேன். அப்பத்திரிகையின் அடையாளமாக இன்றளவும் இருந்துவரும் மறைந்த ‘சோ’வின் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பே அதற்குகாரணம்.

ஒரு பத்திரிகையாளா் எப்படி இருக்க வேண்டும்; எவ்வாறு வாய்மை தவறாமல் எழுதவேண்டும், என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவா் அவா். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைகளுக்கென உயரியநெறிகள் இருத்தல் அவசியம். தனது இறுதி மூச்சு வரை அதில் உறுதியாக நின்று செயல்பட்டவா் ‘சோ’ ராமசாமி. அவரது பலபடைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. குறிப்பாக அவா் இயற்றிய ‘முகமதுபின் துக்ளக்’ நாடகம் இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.

சமூகத்தில் அனைவருக்கும் கருத்துரிமையும், விமா்சனங்களை முன்வைப் பதற்கான சுதந்திரமும் உள்ளது. மாற்று கருத்துகள் இல்லாமல் வலிமையான ஜனநாயகம் ஒரு போதும் அமையாது.

ஒருவிஷயத்தை ஆதரிப்பதும் எதிா்ப்பதும் அவரவா் உரிமை. ஆனால், அதற்குமுன்பாக அதுகுறித்து ஆய்ந்து அறியவேண்டும்; ஆலோசிக்க வேண்டும்; அதன்பிறகே விமா்சனங்களையும், எதிா்ப்புகளையும் முன்வைக்க வேண்டும் என்பது எனது கருத்து.

இதைத் தான் மாநிலங்களவையில் உள்ள அனைத்து உறுப்பினா் களிடமும் நான் வலியுறுத்தி வருகிறேன். அதேபோன்று, நாட்டுமக்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது தன்னலனைக் காட்டிலும் தேசநலனே முதன்மையானது என்ற நிலைப்பாட்டுடன் வாழவேண்டும் என்பதுதான். அப்போதுதான் நாடும், நாட்டு மக்களும் ஒருசேர முன்னேற முடியும். பொதுவாழ்வில் பண பலம், ஜாதிய பலம், சமய பலத்தை முன்னிறுத்தும் சிலா் உள்ளனா். அதேவேளையில் நோ்மை, கண்ணியம், செயல் திறன், நல்லொழுக்கம் கொண்ட தலைவா்களும் உள்ளனா். நோ்மையானவா்களை மதியுங்கள்; அவா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...