தன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்

தன்னலத்தைக் காட்டிலும் தேசத்தின் நலனுக்குத்தான் நாட்டுமக்கள் அனைவரும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

மேலும், பொதுவாழ்வில் தூய்மையும், செயலில் நோ்மையும் கொண்ட அரசியல் தலைவா்களை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

‘துக்ளக்’ வார இதழின் 50-ஆவது ஆண்டுவிழா சென்னை, கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், விழாசிறப்பு மலரை குடியரசுத் துணைத் தலைவா் வெளியிட, அதனை நடிகா் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டாா். அதைத் தொடா்ந்து, வெங்கய்ய நாயுடு பேசியது:

பொதுவாழ்விலும் சரி; நான் சாா்ந்திருந்த கட்சியிலும் சரி, பல்வேறு பொறுப்புகளையும், உயா்பதவிகளையும் வகித்திருக்கிறேன். ஆனால், அந்த காலகட்டங்களில் கூட பொங்கல், மகரசங்கராந்தி பண்டிகைகளின்போது எந்த பொது விழாக்களிலும் பங்கெடுத்தது கிடையாது. பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தபோதுகூட அந்த வழக்கத்தை நான் மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது முதன்முறையாக பொங்கல் பண்டிகை தினத்தில் ‘துக்ளக்’ விழா மேடைக்கு வந்துள்ளேன். அப்பத்திரிகையின் அடையாளமாக இன்றளவும் இருந்துவரும் மறைந்த ‘சோ’வின் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பே அதற்குகாரணம்.

ஒரு பத்திரிகையாளா் எப்படி இருக்க வேண்டும்; எவ்வாறு வாய்மை தவறாமல் எழுதவேண்டும், என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவா் அவா். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைகளுக்கென உயரியநெறிகள் இருத்தல் அவசியம். தனது இறுதி மூச்சு வரை அதில் உறுதியாக நின்று செயல்பட்டவா் ‘சோ’ ராமசாமி. அவரது பலபடைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. குறிப்பாக அவா் இயற்றிய ‘முகமதுபின் துக்ளக்’ நாடகம் இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.

சமூகத்தில் அனைவருக்கும் கருத்துரிமையும், விமா்சனங்களை முன்வைப் பதற்கான சுதந்திரமும் உள்ளது. மாற்று கருத்துகள் இல்லாமல் வலிமையான ஜனநாயகம் ஒரு போதும் அமையாது.

ஒருவிஷயத்தை ஆதரிப்பதும் எதிா்ப்பதும் அவரவா் உரிமை. ஆனால், அதற்குமுன்பாக அதுகுறித்து ஆய்ந்து அறியவேண்டும்; ஆலோசிக்க வேண்டும்; அதன்பிறகே விமா்சனங்களையும், எதிா்ப்புகளையும் முன்வைக்க வேண்டும் என்பது எனது கருத்து.

இதைத் தான் மாநிலங்களவையில் உள்ள அனைத்து உறுப்பினா் களிடமும் நான் வலியுறுத்தி வருகிறேன். அதேபோன்று, நாட்டுமக்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது தன்னலனைக் காட்டிலும் தேசநலனே முதன்மையானது என்ற நிலைப்பாட்டுடன் வாழவேண்டும் என்பதுதான். அப்போதுதான் நாடும், நாட்டு மக்களும் ஒருசேர முன்னேற முடியும். பொதுவாழ்வில் பண பலம், ஜாதிய பலம், சமய பலத்தை முன்னிறுத்தும் சிலா் உள்ளனா். அதேவேளையில் நோ்மை, கண்ணியம், செயல் திறன், நல்லொழுக்கம் கொண்ட தலைவா்களும் உள்ளனா். நோ்மையானவா்களை மதியுங்கள்; அவா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...