நாட்டின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு, ஒவ்வொரு ஏழையும் குடியரசுத்தலைவராக முடியும் என்பதற்கு தனது வாழ்க்கையும் ஒருமுன் உதாரணம் என்று கூறினார்.
பதவியேற்றவுடன் பேசிய திரௌபதி முர்மு, “இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், உரிமைகளின் அடையாளமாக நான்இருப்பேன். புனிதமான இந்தநாடாளுமன்றத்தில் இருந்து குடிமக்களை நான் வாழ்த்துகிறேன்
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு வலுசேர்க்கின்றன. குடியரசுத் தலைவராக நான் பதவியேற்று இருப்பது ஒவ்வொரு ஏழைஇந்தியனின் சாதனை. நான் இந்திய தேசத்தை வளமாக்க பணியாற்றிடுவேன். பழங்குடியினத்தை சேர்ந்த நான் நாட்டின்குடியரசுத் தலைவராக பதவியேற்றது ஜனநாயகத்தின் மகத்துவம்.
சிறிய கிராமத்தில் இருந்துவந்த நான் இந்த பதவிக்கு வந்தது பெருமையான தருணம். நாட்டில் ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு எனதுவாழ்க்கையும் ஒரு முன் உதாரணம். என்னை குடியரசுத் தலைவராக தேர்வுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி.” என்று கூறினார்.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |