வரி நடைமுறையை எளிமைப் படுத்துவதே அரசின்நோக்கம்

வரி நடைமுறையை எளிமைப் படுத்துவதே அரசின்நோக்கம் எனக்கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதில் அரசு தெளிவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் விளக்கமளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: பட்ஜெட் தொடர்பாக நிபுணர்களுடன் ஆக்கப்பூர்வ விவாதம் நடந்தது. சிவில்குற்றங்களை கிரிமினல் குற்றங்களாக கருதப்படக் கூடாது.உள்கட்டமைப்பை உருவாக்க அரசு செலவுசெய்யும். உள்கட்டமைப்பில் முதலீடு செய்வோம் என தெளிவாக கூறியுள்ளோம். அதில் உறுதியாக உள்ளோம். உள்கட்டமைப்பை உருவாக்குவது, நீண்டகால மற்றும் நீண்ட காலபலன்களை கொண்டது. உள்கட்டமைப்பில் 6400 திட்டங்கள் வர உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள், தனியார் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

சில்லறை முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகள் வாங்கலாம். எல்ஐசியின் தற்போதயை வர்த்தகம் பாதிக்கபடாது. எல்ஐசியில் புதியபங்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.பட்ஜெட்டில், சேமிப்புக்கு பலவழிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சலுகைகள் இல்லாத முறையில் எளிதான நடைமுறைகள் வரிவசூல் தொடரும். வரி நடைமுறையை எளிதாக்குவதே அரசின்நோக்கம். டெபாசிட்களுக்கான காப்பீட்டை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரித்துள்ளோம். ரியல் எஸ்டேட் துறைக்கு நிம்மதியை கொடுக்கும்வகையில் அரசும் ரிசர்வ்வங்கியும் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...