டெபாசிட் இழந்த காங்கிரஸ்

70 உறுப்பினர்கள் அடங்கிய டில்லி சட்ட சபைக்கு, கடந்த 8ம்தேதி தேர்தல்நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. பா.ஜ., 67 தொகுதிகளிலும், அதன்கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதாதளம், இரண்டு தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. காங்கிரஸ், 66 தொகுதிகளிலும், அதன்கூட்டணி கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதா தளம், நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி – பா.ஜ., இடையேதான், போட்டி நிலவியது. பாஜக கடுமையான போட்டி காட்டியதால் அதன்  ஓட்டு சதவீதமும் கடந்த தேர்தலைவிட அதிகரித்துள்ளது. 8 இடங்களில் வெற்றிபெறும் பா.ஜ.,வுக்கு, கடந்த தேர்தலைவிட 5 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.காங்கிரஸ்  நிலைமைதான் அந்தோ பரிதாபம். போட்டியிட்ட 66 இடங்களில் ஒருஇடத்தில் கூட அக்கட்சி முன்னிலை வகிக்கவில்லை. அதை விட, 63 இடங்களில் அக்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியதால் காங்கிரஸ்  கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ்  கட்சிக்கு வாய்ப்பளித்து, ஷீலா தீட்சித்தை முதல்வராக ஏற்றுக் கொண்ட டில்லி மக்கள், அதன்பின் தொடர்ந்து காங்., கட்சியை புறக்கணிப்பது இத்தேர்தல் முடிவிலும் வெளிப்படையாக தெரிகிறது. காங்., கட்சி சார்பில், அர்விந்தர்சிங் (காந்திநகர் தொகுதி), தேவேந்திர யாதவ் (பத்லி தொகுதி) மற்றும் அபிஷேக் தத் (கஸ்தர்பா நகர்) ஆகியோர் மட்டும் டெபாசிட் பெற்றனர்.

One response to “டெபாசிட் இழந்த காங்கிரஸ்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...