பாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கேட்கமாட்டார்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்றவாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்தகொடூர தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது.

பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பல்வேறு தலைவர்களும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இன்று மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி புல்வாமா தாக்குதல் குறித்து ஒருசில கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது 40 சி.ஆர்.பி.எப் தியாகிகளை இன்று நினைவில் கொள்கிறோம். சரி இதை கேட்போம் : 1. இந்த தாக்குதலில் இருந்து அதிகம் பயனடைந்தவர் யார்? 2. தாக்குதல் தொடர்பான விசாரணையின் விளைவு என்ன? 3. தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் பொறுப் பேற்றது யார்? என ராகுல் காந்தி பதிவிட்டார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்தது. இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல் நரசிம்ம ராவ், ‘புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நாடுமரியாதை செலுத்தும்போது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் அனுதாபியான ராகுல்காந்தி, அரசாங்கத்தை மட்டுமல்ல, பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து விமர்சிக்கிறார். உண்மையான குற்றவாளியான பாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கேட்கமாட்டார். அவமானம்’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் கேபினட் மந்திரியான (பாஜக) சையத் ஷாநவாஸ் உசேன் ‘ராகுல் காந்தி சி.ஆர்.பி.எப் வீரர்களை அவமதித்துவிட்டார். ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துக்கள் சர்வதேச அரங்குகளில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ள உதவுகின்றன’ என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...