ஆலமரத்தின் மருத்துவ குணம்

 ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல அரைத்து கொட்டைப் பாக்களவு மருந்தை, அரை டம்ளர் பசுவின் பாலில் போட்டுக் கலக்கி குடித்து விட வேண்டும். இவ்வாறு காலை, மாலையாக மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், (வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வயிற்றில் இரைச்சல், சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு) வயிற்றுக் கோளாறு யாவும் குணமாகும்.

ஆலமரத்திலுள்ள இளந்தளிர்களைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து அரைத்து, கொட்டைப்பாக்களவு எடுத்து வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி நின்றுவிடும்.

ஆலமரத்தின் பழங்களைக் கொண்டுவந்து சுத்தம் செய்து அம்மியில் மைபோல அரைத்து கொட்டைபாக்களவு மருந்தை ஒரு டம்ளர் பசுவின் பாலில் போட்டுக் கலக்கி, இரவு படுக்கும் முன் குடித்துவிட்டுப் படுத்தால் மறுநாள் காலையில் மலச்சிக்கல் சரியாகி விடும்.

ஆலமரத்தின் பழத்தைக் கொண்டுவந்து அதே அளவு ஆலவிழுதின் நுனியிலுள்ள பகுதியையும் சேரத்து மைபோல அரைத்து, கொட்டைபாக்களவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது படிப்படியா இறுகும். உடல் பலப்படும். இடையில் நிறுத்தி விட்டால் எந்த விதமான பலனையும் காண முடியாது.
ஆண் மலடு, பெண் மலடு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கூட ஆணும், பெண்ணும் இதே மாதிரித் தொடர்ந்து சாப்பிட்டு உடல் உறவு கொண்டால் நிச்சயமாகக் கரு உற்பத்தியாகும். மருந்து சாப்பிடும் 40 நாட்கள் வரை உடலுறவு கொள்ளக்கூடாது.

ஆலமரத்தின் அடிபாகத்திலுள்ள சுரசுரப்பான பாகத்தை வெட்டுக் கத்தியினால் சுரண்டி எடுத்துவிட்டு, உள்ளேயிருக்கும் பட்டையைத் தேவையான அளவு வெட்டிக் கொண்டு வர வேண்டும். இதேபோல ஆழ மரத்தின் வேர்ப்பட்டையையும் வெட்டிக் கொண்டு வரவேண்டும். வகைக்கு 1௦௦ கிராம் எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு புதிய மண்கலத்தில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீரை விட்டு நன்றாகக் கலக்கி மூடி ஓர் இடத்தில பாதுகாப்பாக வைத்து விட வேண்டும், மறுநாள் காலையில் இந்த நீரை மட்டும் இறுத்தி வெறும் வயிற்றில் குடித்துவிட வேண்டும். உடனே ஒரு டம்ளர் அளவு தண்ணீரை மருந்தில் விட்டு மூடி பழைய இடத்தில வைத்துவிட வேண்டும். இதேபோல மூன்று நாட்களுக்கு ஒரு முறை, பட்டை மாற்றித் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட வேண்டும்.
சிலருக்கு 40 நாட்களில் பாதியளவு சர்க்கரையே குறைந்திருக்கும். மேலும் பாதியளவு குறைய மேலும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் நீரிழிவு அறவே குணமாகும். இது ஒரு கைகண்ட மருந்தாகும். மூன்று நாட்களுக்கு மேல் கண்டிப்பாக பட்டையை மாற்றி விட வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...