சட்டம் அனைத்திலும் மேலானது

தலைநகர் தில்லியில் சர்வதேச நீதித் துறை மாநாடு உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டடத்தில் சனிக் கிழமை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்ஏ.போப்டே ஆகியோர் பங்கேற்றனர்.

2 நாள் நடைபெறும் இந்தமாநாட்டை காலை 10 மணிக்குத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது,

உண்மை மற்றும் சேவைதான் நீதித்துறையின் அடித்தளமாகக் கருதப்படுகின்றன. நாட்டில் எத்தனையோ துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபோல் நீதித்துறையிலும் மாற்றங்கள் கொண்டுவர நாங்கள் பழம் பெறும் ஆயிரக்கணக்கான சட்டங்களை நீக்கினோம். சட்டமே சமூகத்தின் முக்கிய அங்கம்.சட்டம் அனைத்திலும் மேலானது

மரியாதைக்குரிய மகாத்மா காந்தியின் வாழ்க்கை உண்மை மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கபட்டது. அதிலும் அவர் ஒருவழக்குரைஞர் என்பது கூடுதல் சிறப்பு. தான் சந்தித்த முதல்வழக்கு குறித்து தனது சுயசரிதையில் மகாத்மாகாந்தி மிக விரிவாக எழுதியுள்ளார்.

சமீபத்தில், உலகளாவிய விவாதங்களுக்கு உட்பட்ட சிலமுக்கியமான நீதித்துறை தீர்ப்புகள் வந்துள்ளன. இந்ததீர்ப்புகளுக்கு முன்னர், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலகவலைகளையும், சந்தேகங்களையும் வெளிப்படுத்தின, ஆனால் 1.3 பில்லியன் இந்தியர்களும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில்,

பயங்கரவாதிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு தனியுரிமைக்கு இனி இடமில்லை. இது உலகளாவிய சவால் களுக்கான நேரம். நாம் தீர்வுகளை எவ்வாறு நாடுகிறோம் என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக உள்ளது. சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் வழக்கமான ஒழுங்கு முறையின் படி தீர்வுகளை ஏற்றுக்கொள்வது தான் இதற்கு ஒரேபதில் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும் என்றார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பேசுகையில்,

இந்தியா பலகலாச்சாரங்கள் மற்றும் மரபுகளால் உருவான நாடாகும். இதுவே நாட்டின் நீதிஅமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கும் சமமாக பொருந்தும் உண்மையாகும். அனைத்துவகை நாகரிகங்களில் உள்ள கலாச்சார சட்டங்களையும் இந்திய நீதித் துறை ஒருங்கிணைத்துள்ளது என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...