உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய் -பிரதமர் மோடி பெருமிதம்

‘உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய். தேச நலனுக்காக நீதிமன்றங்கள் செயல்படுகிறது’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

டில்லியில் நீதித்துறைக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை இன்று (ஆகஸ்ட் 31) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நீதிமன்றங்கள் தேச நலனுக்காக செயல்பட்டு வருகிறது. நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றம் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியர்கள் ஒருபோதும் நீதித்துறை மீதோ, நீதிமன்றங்கள் மீதோ சந்தேகம் எழுப்பியதில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் 75 ஆண்டுகள் என்பது ஒரு நிறுவனத்தின் பயணம் அல்ல; இந்திய அரசியலமைப்பு மற்றும் மதிப்பின் பயணம். உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய். இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்துகிறது. நெருக்கடி நிலையின் இருண்ட காலத்திலும் உச்ச நீதிமன்றம் எங்கள் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தது.

எப்போதும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தது. நீதித்துறையில் மாவட்ட நீதித்துறை என்பது முக்கியமான தூணாக விளங்குகிறது. நமது குற்றவியல் சட்டங்கள் காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்க வழிவகை செய்தது. புதிய சட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கும்.

மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 4.5 கோடி வழக்குகளை தீர்க்க வழிவகை ஆராயப்படுகிறது. 10 ஆண்டுகளில் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு ரூ.8 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. புதிய கிரிமினல் சட்டங்கள் குடிமக்கள், நீதித்துறைக்கு முன்னுரிமை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளை மையமாக கொண்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமூகத்திற்கு மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன.இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...