மோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்

இந்தியா வந்துள்ள டிரம்ப், டில்லியில் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது: இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்ட இரண்டு நாட்களும், தொழில்துறை சி.இ.ஓ., உடனான சந்திப்பு ஆகியவை சிறப்பானதாக இருந்தது. 21 ஆயிரம்கோடி அளவுக்கு பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டுள்ளது. எரிசக்தி துறையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்ததுறையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோடியுடனான உறவு தனித்துவம் வாய்ந்தது. மோடி, உறுதியான, பெரிய, வலிமையான தலைவர். அவரைசந்தித்தது சிறப்பான தருணம்

கொரோனா வைரஸ் சிறப்பாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வைரசால், இந்தியாவில் பெரியளவில் பாதிப்பு இல்லை. சிறப்பாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சீன அதிபரிடம் பேசியுள்ளேன். அதனை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஆப்கனில் 99 சதவீதமக்கள் அமைதியை விரும்புகின்றனர். தலிபான்களுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என நம்புகிறேன். இந்த ஒப்பந்தம் குறித்தும், தெற்கு ஆசியாவில் அமைதிகுறித்தும் மோடியுடன் பேசியுள்ளேன். இந்த ஒப்பந்தத்தால், இந்தியா மகிழ்ச்சி அடையும்.

பயங்கரவாதத்தை ஒடுக்க மற்றவர்களைவிட அதிகளவில் பணியாற்றியுள்ளேன். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும். ஈரானைசேர்ந்த சுலைமானியை, கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அமெரிக்கா கொன்றுள்ளது. உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர். பாகிஸ்தான் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை வேரறுக்கவேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஐ.எஸ்., அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்துபணியாற்ற வேண்டும்.

உலகின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. அமெரிக்காவில், இந்தியர்கள் பல ஆயிரம்கோடி ரூபாய் முதலீடு செய்வார்கள் என நம்புகிறேன். ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு அதிக இறக்குமதிவரி விதிப்பது குறித்து பேசினோம்.

மதசுதந்திரம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசினேன். மத சுதந்திரத்தையே விரும்புவதாக மோடி என்னிடம் தெரிவித்தார். பல்வேறு தரப்புமக்களிடம் பேசியதில் இருந்து மதசுதந்திரம் குறித்து எதிர் மறையான கருத்து வரவில்லை. இதற்காக இந்தியா கடினமாக உழைத்துள்ளது. சிஏஏ குறித்து மோடியுடன் பேசவில்லை. டில்லிகலவரம் குறித்து கேள்விப்பட்டேன். இது இந்தியாவின் உள்நாட்டுவிவகாரம். மக்களுக்கு அரசு நல்லதையே செய்திருக்கும் என நம்புகிறேன். எச்1 – பி விசா குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன்.

பாகிஸ்தான் குறித்து பலவிஷயங்கள் பேசியுள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் பெரியநெருடலாக உள்ளது. இரு நாடுகளும் பிரச்னையை தீர்க்க பணிபுரிந்துவருகிறது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய என்னால் முடிந்ததை செய்வேன். அமைதியான மனிதரான மோடி, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார். எந்தவொரு பிரச்னைக்கும் இருபக்கங்கள் இருக்கும். அதேபோல், காஷ்மீர் விவகாரத்திலும் இரு பக்கங்கள் உள்ளது. இந்தியா வலிமையான நாடு. பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வலிமை அவர்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...