மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான்

மேற்குவங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் அமையும் என்பதால் மாநில முதல்வராக இருக்கும் மமதாபானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்துகொண்டார். அமித்ஷாவின் கொல்கத்தா வருகைக்கு எதிராக பல்வேறுகட்சிகள், இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின.

கொல்கத்தாவில் சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

மமதா பானர்ஜி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் மோடி, குடியுரிமைசட்ட திருத்தத்தைக் கொண்டு வந்த போது மமதா பானர்ஜி எதிர்க்கிறார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்து எதிர்க்கின்றன. மேற்குவங்கத்தில் ரயில் நிலையங்கள் எரிக்கப்பட்டன. அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நாங்கள் முயற்சிக்கும்போது ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்?

மமதாவின் ஆட்சிக் காலத்தில் மேற்குவங்கத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன. மமதாவின் ஆட்சிக்காலத்தில் மேற்கு வங்கத்தை சொர்க்கபூமியாக மாற்ற முடியாது. சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காக குடியுரிமைசட்ட திருத்தம் கொண்டுவரப்பட வில்லை. ஒவ்வொருவருக்கும் குடியுரிமை வழங்குவதற்குதான் மத்தியஅரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜியால் தடுத்துவிடமுடியாது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கவேண்டாமா? நீங்களே பதில் சொல்லுங்கள்.. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து தடைகளையும் பிரதமர் மோடி அகற்றிவிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...