மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான்

மேற்குவங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் அமையும் என்பதால் மாநில முதல்வராக இருக்கும் மமதாபானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்துகொண்டார். அமித்ஷாவின் கொல்கத்தா வருகைக்கு எதிராக பல்வேறுகட்சிகள், இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின.

கொல்கத்தாவில் சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

மமதா பானர்ஜி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் மோடி, குடியுரிமைசட்ட திருத்தத்தைக் கொண்டு வந்த போது மமதா பானர்ஜி எதிர்க்கிறார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்து எதிர்க்கின்றன. மேற்குவங்கத்தில் ரயில் நிலையங்கள் எரிக்கப்பட்டன. அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நாங்கள் முயற்சிக்கும்போது ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்?

மமதாவின் ஆட்சிக் காலத்தில் மேற்குவங்கத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன. மமதாவின் ஆட்சிக்காலத்தில் மேற்கு வங்கத்தை சொர்க்கபூமியாக மாற்ற முடியாது. சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காக குடியுரிமைசட்ட திருத்தம் கொண்டுவரப்பட வில்லை. ஒவ்வொருவருக்கும் குடியுரிமை வழங்குவதற்குதான் மத்தியஅரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜியால் தடுத்துவிடமுடியாது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கவேண்டாமா? நீங்களே பதில் சொல்லுங்கள்.. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து தடைகளையும் பிரதமர் மோடி அகற்றிவிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...