கடந்த சிலமாதங்களாகவே, பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் செய்திகள் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது அதிகாரபூர்வமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பை அறிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் அமைச்சரவை, 10 பொதுத்துறை வங்கிகளை வெறும் நான்கு பொதுத்துறை வங்கிகளாக இணைக்க, ஒப்புதல் கொடுத்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அரசு தொடர்ந்து சம்பந்தப் பட்ட வங்கிகளோடு தொடர்பில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஏர்கனவே பொதுத்துறை வங்கிகளை இணைக்க, வங்கிகளின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்து இருக்கிறார்களாம்.
ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததுபோல, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல்பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டுவங்கிகளும் நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல்பேங்க் உடன் இணைக்கப்பட இருக்கிறது. இந்த இணைப்புக்குப் பின், இந்தஜோடி தான் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்.
சிண்டிகேட்வங்கி, தென் இந்தியாவின் புகழ் பெற்ற கனரா வங்கி உடன் இணைக்கப்பட இருக்கிறது. சென்னையை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி உடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட இருக்கிறது. ஆந்திரா வங்கியும் கார்ப்பரேஷன் வங்கியும், யூனின் பேங்க் ஆஃப் இந்தியா உடன் இணைக்கப்பட இருக்கின்றன.
கடந்த டிசம்பர் 2018 வாக்கில்தான், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்த விஷயங்கள் பொதுவெளிக்கு வந்தது. மத்திய ரிசர்வ்வங்கி கூட, இந்திய பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்ட ஒருவலுவான வங்கி உருவானால், உலக அளவில் ஒருபெரிய வங்கியாக உருவாகலாம் எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
1mythical