மண்டல ஊரக வங்கிகளின் ஆய்வுக்கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுதில்லியில் இன்று, மண்டல ஊரக வங்கிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிச் சேவைகள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர், கூடுதல் செயலாளர், பொருளாதார நிதிச் சேவையின் உயர் அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, சிட்பி, நபார்டு ஆகியவற்றின் பிரதிநிதிகள், மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

43 மண்டல ஊரக வங்கிகளுடனான இந்த கூட்டம், வணிக செயல்திறன், டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்புகளில் வணிக வளர்ச்சியை ஊக்குவித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதில் மண்டல ஊரக வங்கிகளின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பிரதமர் விஸ்வகர்மா மற்றும் பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் கடன்களை அனுமதிக்கும் போது, பயனாளிகளை தெளிவாக அடையாளம் காண்பதில், அதிக கவனம் செலுத்துமாறு, மண்டல ஊரக வங்கிகளை மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். மண்டல ஊரக வங்கிகள் தரைமட்ட வேளாண் கடன் வழங்கலில் தங்கள் பங்கை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டன.

ஆய்வுக் கூட்டத்தில் விளக்கக் காட்சியின் போது, 2022-ம் ஆண்டில் வழக்கமான மறுஆய்வு தொடங்கப்பட்டதிலிருந்து மண்டல ஊரக வங்கிகளின் நிதி செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை திருமதி சீதாராமன் பாராட்டினார், மேலும் எதிர்காலத்திலும் இந்த விரைவைத் தொடருமாறு ஊரக வங்கிகளை வலியுறுத்தினார். 2023-24 நிதியாண்டில் மண்டல ஊரக வங்கிகள் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹7,571 கோடியை பதிவு செய்துள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...