காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின் நிர்வாகத்தில் முறைகேடு

எஸ் வங்கியின் வீழ்ச்சிதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரசின் ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவருவதை இது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதே போல  முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், நிதி நிறுவனங்களை நிர்வகிக்கும் திறமை மத்தியஅரசுக்கு இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.  பாஜக ஆட்சிக்கு வந்தபின் இரண்டு வங்கிகள் திவாலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக இணையபிரிவு தலைவர் அமித்மால்வியா, இதற்கு பாஜக அரசு காரணமல்ல, காங்கிரசின் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம் என கூறியுள்ளார். . இந்தியவங்கிகளின் குழப்ப நிலைக்கு ப.சிதம்பரம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், எஸ் வங்கியில் முதலீடுசெய்தவர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும், அவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும்  தெரிவித்தார்.. கடந்த காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின் நிர்வாகத்தில் முறைகேடு தொடங்கி நடைபெற்று வந்தது கண்டறியப் பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். இந்நிலையில் எஸ் வங்கித் தலைவர் ராணா கபூரின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...