மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நிதிஒதுக்கி உள்ளது.
நாடெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாகப் பல மாநிலங்களில் பணி இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சக் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இவர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு உதவிஅளிக்கும் எனப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை சுகாதார பணிகளுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு முதல் கட்டமாக ரூ.2570 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ. 987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு ரூ.431 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
2paddling