மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை -நிர்மலா சீதாராமன்

புதுடில்லி, ”பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்ப வேண்டாம். எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை,” என, எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய பட்ஜெட் உரையை நினைவுபடுத்தி லோக்சபாவில் நேற்று காரசாரமாக பேசினார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2024 – 25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆந்திராவுக்கு 15,000 கோடி ரூபாயும், பீஹாருக்கு 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மேலும், பட்ஜெட் உரையில் தமிழகம் உட்பட 17 மாநிலங்களின் பெயர்கள் கூட இடம் பெறவில்லை என விமர்சித்த எதிர்க்கட்சிகள், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றஞ்சாட்டின.

தன் பட்ஜெட் நிறைவு உரையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது:

இந்த பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. அப்படியொரு தோற்றத்தை உருவாக்க, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க சவால் விடுக்கிறேன்… அவர்கள் இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்களில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளனரா?

கடந்த 2004 – 05ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், 17 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அந்த மாநிலங்களுக்கு நிதி சென்று சேரவில்லையா? அப்படி அவர்கள் நிதியை நிறுத்தி வைத்து இருந்தால் இப்போது எங்களிடம் கேள்வி கேட்கலாம்.

அதேபோல, 2005 – 06 பட்ஜெட்டில் 18 மாநிலங்களின் பெயர்களும், 2007 – 08ல் 16 மாநிலங்களின் பெயர்களும், 2009 – 10ல் 20 மாநிலங்களின் பெயர்களும் விடுபட்டு இருந்தன.

பட்ஜெட்டில் பெயர் இடம் பெறாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து மக்களை திசை திருப்பாதீர்கள்.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக நாம் உள்ளோம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மூலதன செலவின உந்துதல் காரணமாக, பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளோம்.

இலக்கு நிர்ணயம்

கடந்த 2023 – 24ல் நிதிப் பற்றாக்குறை, 5.6 சதவீதமாக இருந்தது; இதை, 4.9 சதவீதமாக குறைக்க நடப்பு நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; 2025 – 26ல், 4.5 சதவீதமாக குறையும்.

இந்த பட்ஜெட்டில் ஜம்மு – காஷ்மீருக்கு 17,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜம்மு – காஷ்மீர் போலீஸ் துறையின் செலவுக்கான 12,000 கோடி ரூபாயும் அடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின், 2024 – 25ம் நிதியாண்டுக்கான 48.21 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட், லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...