நடுத்தர வர்க்கத்தினருக்கும்  மிகப் பெரிய ஆறுதல்

முழு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் தரும்வகையில், மூன்று மாதங்களுக்கான தவணைகள் ஒத்தி வைக்கப் படுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குறைத்துள்ளது. ‘சிபில்’ மதிப்பீட்டில், இந்தசலுகைகள் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

உலகளவில், கொரோனா வைரஸ் பரவிவருவதால், நம் நாட்டில், 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. கடந்த சிலமாதங்களாக, பொருளாதார மந்தநிலை இருந்த நிலையில், இந்த ஊரடங்கால், பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு, உணவு தானியங்கள், பணப்பயன், சமையல் எரிவாயு உள்ளிட்டவை, இலவசமாக வழங்கும் வகையில், மத்தியஅரசு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில்.  நடுத்தர வர்க்கத்தினருக்கும்  மிகப் பெரிய ஆறுதல் அளிக்கும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, ரிசர்வ் வ ங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியதாவது:மக்கள், வங்கிகளில் வாங்கியுள்ள அனைத்துவகை கடன்களுக்குமான தவணையைச் செலுத்துவதில், மூன்றுமாதம் விலக்கு அளிக்கப்படுகிறது.அதாவது, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் செலுத்தவேண்டிய தவணைகளைக் கட்ட வேண்டாம்; அவை ஒத்தி வைக்கப்படுகின்றன. இதைச்செயல்படுத்த, அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன், வாகனகடன் உட்பட அனைத்து வகையான, இ.எம்.ஐ.,களுக்கும் இதுபொருந்தும். இது, வாராக் கடனாகவும் கருதப்படாது என்பதால், சிபில் தர வரிசையில், குறைத்து மதிப்பிடப்படாது.

‘ரெப்போ’ எனப்படும், வங்கிகளுக்கு, ரிசர்வ்வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம், 75 அடிப்படை புள்ளிகளை குறைக்க, முடிவு செய்யபட்டுள்ளது. அதன்படி, கடனுக்கான வட்டி, 5.15 சதவீதத்திலிருந்து. 4.40 சதவீதமாக குறைகிறது. இதனால், பொதுமக்களின் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன் களுக்கான வட்டிவிகிதம் குறையும்.

கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு, மிகப்பெரிய வட்டி குறைப்பு இது. கடந்த, 2009ல், 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு, வட்டிவிகிதம், 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 2004க்கு பின், மிகக்குறைந்த வட்டி விகிதம் இது.

இதைத் தவிர, ‘ரிவர்ஸ் ரெப்போ’ எனப்படும், வங்கிகள், ரிசர்வ் வங்கியில் செலுத்தும் தொகைக்கான வட்டியும், 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகள், பணத்தை ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்வதை விட, அதிககடன்களை வழங்க ஊக்குவிக்கப்படும்.

மேலும், சி.ஆர்.ஆர்., எனப்படும், வங்கிகள் வைத்திருக்கக் கூடிய ரொக்கஇருப்பு விகிதம், 100 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வங்கிகளிடம் உள்ள கூடுதல்ரொக்க இருப்பான, 1.37 லட்சம் கோடி ரூபாய், புழக்கத்துக்கு வரும். அது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகளால், 3.74 லட்சம்கோடி , புழக்கத்துக்கு வரும். 2008 – 09ல் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது இருந்ததைவிட, நம் பொருளாதாரத்தின் அடிப்படைகள், தற்போது மிகவும் வலுவானதாகவும், சிறப்பாகவும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...