தியானமும், பிரார்த்தனையும்

 தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை வேண்டிக் கொள்ளுதல் பிரார்த்தனை. 'அர்த்தனை' என்றால் வேண்டுகோள். 'பிர' என்னும் சொல் சிறப்பானது என்ற பொருளை உடையது. எனவே, இறைவனைக் குறித்து விடுக்கப்படும் கோரிக்கை பிரார்த்தனை எனப்படும்.

 

குறுகிய நோக்கமில்லாது பரந்த நோக்கத்துடன் பிரார்த்தனை செய்யலாம். ஆனால், அந்நிலையில் மனமும் இறைவனும் வேறுபட்டு நிற்கும். இறைவனுக்கு எதிரில் மனம் நின்று வேண்டுவது மட்டுமே இருக்கும். தியான நிலையில் மனம் இறைவனிடம் ஒன்றி ஆன்மாவுடன் கலந்து விடுகிறது. தியானத்தில் வெற்றி கண்ட பின்பு மனம் புலன்களின் வழி திரும்பாது. பிரார்த்தனையில் வேண்டுதல் நேரம் போக, மற்ற நேரங்களில் மனம் தன்னிலையில் வேற்பட்டிருக்கும். பிரார்த்தனையில் இறைவனையும் வேராகக் கருதி, உணர்ச்சி பூர்வமாகத் துதி செய்து வேண்டுவது உண்டு. தியானம் என்பது உடல், மன நோய்களுக்கும் மருந்து. சமுதாயத்திற்குச் செல்வம் போன்றது.

மன ஒருமைப்பாடு வேறு; தியானம் வேறு. ஏதேனும் ஒருபொருளில் மனம் ஈடுபட்டு அகலாதிருப்பது ஒருமைப்பாடு. அது நல்லதாகவும் இருக்கலாம். தீயவையாகவும் இருக்கலாம். வெளியுலகப் பொருட்களாகவும் இருக்கலாம். இரு இலக்கை நோக்கி வேடன் அம்பு எய்துவதற்கு இணையானது, ஒருமைப்பாடு. தியானம் அந்நிலையை விடச் சிறந்தது. வெளிப்பொருள்களை நோக்கி, உள்முகமாக மனம் செல்வது தியானம். மனதின் மூலம் ஆன்மா தன்னைத்தானே உணர்ந்து கொள்வது தியானம்.

குழந்தை மீரா தன் தாத்தாவைப் பார்த்து, பிரார்த்தனை என்றால் என்ன? தியானம் என்றால் என்ன? என்று கேட்டது. இந்த இரண்டின் வேறுபாட்டை மிகத் தெளிவாக, அழகாக எடுத்துக் கூறினார் அந்த தாத்தா.

"நாம் கடவுளுடன் பேசுவது பிரார்த்தனை. கடவுள் நம்முடன் உரையாடுவது தியானம்". நாம் இறைவனுடன் வலியப் பொய் உரையாடுவதில் பிணைப்பு அவ்வளவாக உறுதியாக இருக்காது. ஏனென்றால், பல விஷயங்களில் ஈடுபட்ட மனம் அவ்வளவு எளிதில் அவற்றை உதறிவிடாது. இறைவனே நம்மை தன் பக்கம் அழைத்துக் கொள்ளும் போது, உலக ஸம்ஸ்காரங்கலாகிய தளைகள் தாமாகவே அகன்று விடுகின்றன.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...