ரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரிலையன்ஸ் மிகபயனுள்ள பங்களிப்பைச் செய்துவருகிறது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடுமுழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை யளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. அதனால், ரிலையன்ஸ் நிறுவனம் சார்பிலும் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனை கட்டப்படுகிறது. மேலும், வென்டி லேட்டர்கள், முகக்கவசம் உற்பத்திசெய்யப்படும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம்சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பிரதமர் நிவாரண நிதிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் 500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில், ‘கொரோனாவுக்கு எதிரானப் போராட்டத்தில் ஒட்டு மொத்த ரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. மருத்துவ முகாம் அமைப்பதாக இருந்தாலும், மக்களுக்கு ஒதுக்குவதாக இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல் படுகின்றனர். கொரோனா வைரஸுக்கு எதிராக அவர்களுடைய பிறசெயல்பாடுகளுக்கும், பிரதமர் நிவாரண நிதிக்கு அவர்கள் நிதியளித்ததற்கும் முகேஷ் அம்பானிக்கும், நீடா அம்பானிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

அதிகம் படித்தது