ரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரிலையன்ஸ் மிகபயனுள்ள பங்களிப்பைச் செய்துவருகிறது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடுமுழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை யளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. அதனால், ரிலையன்ஸ் நிறுவனம் சார்பிலும் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனை கட்டப்படுகிறது. மேலும், வென்டி லேட்டர்கள், முகக்கவசம் உற்பத்திசெய்யப்படும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம்சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பிரதமர் நிவாரண நிதிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் 500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில், ‘கொரோனாவுக்கு எதிரானப் போராட்டத்தில் ஒட்டு மொத்த ரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. மருத்துவ முகாம் அமைப்பதாக இருந்தாலும், மக்களுக்கு ஒதுக்குவதாக இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல் படுகின்றனர். கொரோனா வைரஸுக்கு எதிராக அவர்களுடைய பிறசெயல்பாடுகளுக்கும், பிரதமர் நிவாரண நிதிக்கு அவர்கள் நிதியளித்ததற்கும் முகேஷ் அம்பானிக்கும், நீடா அம்பானிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

அதிகம் படித்தது