டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல்

5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் அதிநுண்ம அறிவியல்எனப்படும் நானோ அறிவியல் மகத்தான பங்களிப்பை வழங்கும் என்று மத்தியஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

சண்டிகருக்கு அருகிலுள்ள மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐ.என்.எஸ்.டி) ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், வேளாண் நானோ தொழில்நுட்பம், நானோ மருத்துவம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், நானோ மின்னணுவியல் உள்ளிட்டவை நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்த நிறுவனம் அதன் தனித்துவமான மற்றும் இணையற்ற மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மூலம் அறிவியலை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் இளைய தலைமுறையினரிடையே தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்தின் ஆசிரியர்கள் நாடு முழுவதும் சுமார் 300 பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறிவியல் விழிப்புணர்வை பரப்பியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

தேசத்திற்கான நானோ அறிவியல் அறிவு என்பதே நமது குறிக்கோள் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நானோ கல்வியை மேம்படுத்துதல், நானோ தொழில்நுட்பத்தின் மேம்பட்ட பயிற்சி மற்றும் ஆய்வக நுட்பங்களை உயர் மட்டத்தில் வழங்குதல், புதுமையான அறிவியல் திட்டங்களை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்தப் பிரிவில் அரசு செயல்படுவதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மொஹாலியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமாகும். இது இந்தியாவில் நானோ ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. இது ஜனவரி 3, 2013 அன்று தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இது நாட்டின் முதல் இந்திய நானோ ஆராய்ச்சி நிறுவனமாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...