நல்ல சூழ்நிலை
தியானம் குறித்த நூல்களைப் படித்தல்
மகான்களின் வரலாறுகளைப் படித்தல்
தியாகத்திற்கான பொருள்
தியானம் மந்திரம்
குறியீடு (அடையாளம்)
குரு.தியானம் பழக நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரிகரணச் சுத்தி பெறவேண்டும். நல்ல நட்புகளுடன் அதாவது ஒத்த மனநிலையுடைவர்களுடன் சேர்ந்திருத்தல்.
தியானம் தொடர்பான நூல்களையும், மகான்களின் வரலாறுகளையும் படிக்கலாம்.
தியானம் செய்வதற்கு அவசியம் ஒரு பொருள் மீதுதான் தியானம் செய்ய வேண்டும். ஓர் புள்ளியையோ, மலரையோ, ஒளியையோ அல்லது இறைவனையோ நினைத்து தியானம் செய்யலாம். இறைவனைத் தியானிப்பது தான் சிறந்தது.
கடலின் ஆழத்தில் எவ்வளவுக் கெவ்வளவு சென்று காற்று நீரைக் கொண்டு வந்து அலையாக எழுப்புகிறதோ அவ்வளவுக் கவ்வளவு அந்த அலையின் உயரமிருக்கும். அதுபோல மந்திரங்களும், மனத்தின் ஆழத்திற்குச் செல்வதற்கேற்ப அதிக அதிர்வுகளை எழுப்புவதன் மூலம், உச்ச உணர்வை உண்டாக்கிப் பலனைத் தருகின்றன.
மந்திரங்கள் இரண்டு வகை. 'ஓம்' என்ற மூலமந்திரம். அடுத்து பீஜமந்திரம். ஹங் – யங் – ரங் – பங் – லங் இந்த ஐந்தும் பூதங்களைக் குறிப்பன. ஹரிங் என்பது சக்தியைக் குறிக்கும். இவை இயற்கையில் அமைந்த பெயர்களாகும். பீஜம் என்றால் விதை என்று பொருள். குரு உபதேசித்த மந்திரத்தைத் தியானிக்கலாம்.
நன்றி : பானுகுமார்
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.