இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிகாட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். பிரதமர் மோடி அதில் கூறியதாவது;-
*மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்
* ஊரடங்கை மதித்துநடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
*நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலகநாடுகள் பின்பற்றி வருகின்றன.
* இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது
*நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகபோராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
*வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும்.
*நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன் இணைந்துள்ளோம்
*நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத் தக்கது.
*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டுவர வேண்டும்.
*கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தரதீர்வை நோக்கி நாம் செல்லவேண்டும்
*வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்.
*வரும் ஞாயிற்று கிழமை கொரோனாவுக்கு எதிராக நாட்டுமக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும்
*வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின் மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும்
*ஏப்.5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்.
* சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் – ஒன்று கூடிவிளக்கு ஏற்ற கூடாது.
* நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.
* அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை வீழ்த்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |